BSNL Bonanza Offer: ஒன்று முதல் நான்கு மாதங்கள் வரை இலவசங்களை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் பிராட்பேண்ட் (Broadband) சேவையில் நான்கு மாதங்கள் வரை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.. தற்சமயம் டீழயெணெய என்ற பெயரில் தான் சலுகையை அறிவித்துள்ளது.

அதாவது இந்த சலுகை பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே கூறலாம். மேலும் இந்தசலுகையுடன் புதிய பயனர்களை அதன் நெட்வொர்க்குடன் இணைக்க நிறுவனம் முயற்சிக்கிறது. இப்போது பிஎஸ்என்எல்
அறிவித்துள்ள சலுகையை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் திட்டங்களுடன் இலவச போனான்சா சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இந்ததிட்டத்தின் 12மாத சந்தாவை எடுத்துக் கொள்ளும் பயனர்களுக்கு ஒரு மாத இலவச சேவை வழங்கப்படுகிறது.

பின்பு நீங்கள் பிஎஸ்என்எல் பிராட்பேண்டின் 24மாத நிலையான சந்தாவைஎடுத்துக்கொண்டால், மூன்று மாத கூடுதல்சேவையை முற்றிலும் இலவசமாக பெறமுடியும். இதேபோன்று இந்நிறுவனத்தின் 36மாத ஒற்றை திட்ட சந்தாவுக்கு
கூடுதல் கட்டணம் இல்லாமல் நான்கு மாத சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்ல் நிறுவனம் மக்களுக்கு தகுந்தபடி சிறப்பான பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது, இந்த திட்டங்கள்ரூ.99 முதல் தொடங்குகின்றன, இந்நிறுவனத்தின் மிக விலையுயர்ந்த பிராட்பேண்ட் திட்டத்தின் விலை ரூ.16,999-ஆகும்.இந்நிறுவனத்தின் சிறந்த ஃபாரத் ஃபைபர் திட்டம் ரூ.777-ல் துவங்குகிறது. இதே ட்டம் புதிய பயனர்களுக்கு ரூ .849 இல் தொடங்குகிறது. இந்த சலுகை அனைத்து லேண்ட்லைன், டி.எஸ்.எல், பாரத் ஃபைபர் மற்றும் பிபி ஓவர் வைஃபை பிராட்பேண்ட் திட்டங்களுக்கும் செல்லுபடியாகும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

கண்டிப்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தஇ நீங்கள் நிறுவனத்தின் கட்டணமில்லா எண் 18003451500 ஐ அழைக்க வேண்டும். குறிப்பாக திட்டத்தை செயல்படுத்தும்போது, 12,24, அல்லது 36மாதங்களுக்குசெயல்படும் திட்டத்திற்கு குழுசேர வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம், பின்பு இந்த சந்தாக்களில் போனான்சா சலுகையின் கீழ் ஒன்று முதல் நான்கு மாதங்கள் வரை இலவச சேவையைப் பெறமுடியும்.

மேலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் போர்ட்டலிலிருந்து புதிய இணைப்பையும் கோரலாம், தற்போதுள்ள பிஎஸ்என்எல்
பயனர்கள் நான்கு மாதங்கள் வரை இலவச சேவைக்கு சுய பாதுகாப்பு பயன்பாடு அல்லது வலைத்தளம் மூலம் தங்கள் சந்தாவை புதுப்பிக்க முடியும். இந்நிறுவனத்தின் இணையதளத்தில் திட்டங்கள் மற்றும் அவற்றில் காணப்படும் நன்மைகள் பற்றிய விவரங்களை எளிமையாக பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications