ஜியோ போலஅளவில்லா வாய்ஸ்கால், டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!
ஜியோ நிறுவனத்தைப் போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் குறைந்த விலையில், புதிய சலுகையை வழங்க முன்வந்துள்ளது. ரூ. 299 ரூபாயில் தினமும் 1.5 ஜிபி டேட்டா அளவற்ற வாய்ஸ் கால் உள்ளிட்ட சேவையை வழங்குவதாக பிஎஸ்என
ஜியோ நிறுவனத்தைப் போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் குறைந்த விலையில், புதிய சலுகையை வழங்க முன்வந்துள்ளது.

ரூ. 299 ரூபாயில் தினமும் 1.5 ஜிபி டேட்டா அளவற்ற வாய்ஸ் கால் உள்ளிட்ட சேவையை வழங்குவதாக பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய அறிவிப்பு:
வாடிக்கையாளர்கள் தினமும் 45 ஜிபி டேட்டாவை நொடிக்கு 8 எம்பி வேகத்தில் வழங்குகின்றது. 30 நாட்களுக்கு வேலிட்டி கொண்டது புதிய சலுகையில் பயனர்கள் தினமும் 1.5 டேட்டா பயன்படுத்த முடியும்.

வேகம் குறைந்தவுடன்:
ஜியோவை போலவே டேட்டா பேலன்ஸ் முடிந்தவுடன் பிஎஸ்என்எல் நிறுவனமும் 1எம்பியாக வேகத்தை குறைத்து விடுகின்றது.
1எம்பி வேகத்தில் வழங்குப்படுவதால் இந்த சலுகை பிராட்பேண்ட் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இதை பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

அன்லிமிட்டெட் கால்:
பிராட்பேண்ட் மட்டும் இல்லாமல் பிஎஸ்என்எல் நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குகின்றது. இந்த வசதி உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு வெறும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே வழங்குகிறது.

ரூ.300 மதிப்பு:
மற்ற நெட்வொர் எண் களுக்கு அழைப்புகளை மேற்கொள்வோருக்கு ரூ.300 மதிப்புள்ள இலவச அழைப்புகளை பிஎஸ்என்எல் வழங்குகின்றது.

இலவச வாய்ஸ் கால் சேவை:
வார நாட்களில் தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை இலவச வாய்ஸ் கால்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து நெட்வொர்க்களும் இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது.

ரூ.50 கேஷ்பேக்:
இதுமட்டும் இல்லாமல் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. புது சலுகை பிஎஸ்என்எல் நிறுவன டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்பேக் சலுகை ஆக்டிவேட் செய்யப்பட்டது முதல் மூன்று மாதங்கள் அல்லது 180 நாட்களுக்கு வழங்கப்படும்.

புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்:
இந்த புதிய சலுகை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணையும் புது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பழைய பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்த முடியாது.


Click it and Unblock the Notifications