பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்: 1ஜிபி டேட்டா- ரூ.1.1 மட்டுமே.!
குறிப்பாக இதனுடன் இந்தியா முழுவதும் அனைத்து நெடவொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1ஜிபி மெமரியுடன் இலவச மின்னஞ்சல் அக்கவுன்ட் ஒன்றும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட் நாட்களாக எதிர்பார்த்த பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக முகேஷ் அம்பானியின் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் விரைவில் அறிமுகாக இருக்கின்றன, இதற்கு போட்டியாக தான் இப்போது பிஎஸ்என்எல் தனது ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை துவங்கியுள்ளது.

மேலும் பாரத் ஃபைபர் என்று அழைக்கப்படும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவைகள் அதிகபட்சம் நொடிக்கு 100எம்பி வேகத்தில் (100Mbps) டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள்
ரூ.500 முன்பணமாக செலுத்த வேண்டும்.

ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல்
நீங்கள் செலுத்தும் ரூ.500 முன்பணம் ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் சேவைக்கானதாகும், இதற்கு வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 வாடகை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 ஜிபி டேட்டா
பிராட்பேண்ட் திட்டங்கள் பொருத்தவரை பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.777-என்ற விலையில துவங்குகிறது, இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 50Mbps வேகத்தில் 500 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்
மேலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps-ஆக குறைக்கப்படுகிறது, இது டேட்டா மட்டுமின்றி இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1ஜிபி மெமரியுடன்
இலவச மின்னஞ்சல் அக்கவுண்ட் ஒன்றும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3500ஜிபி டேட்டா
பிஎஸ்என்எல் பார்த் ஃபைபர் விலை உயர்ந்த திட்டமாக ரூ.16,999-என்ற திட்டம் உள்ளது, இதில் வாடிக்கையாளர்களுக்கு 100Mbps வேகத்தில் 3500ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 10Mbps ஆக குறைக்கப்படும்.

மின்னஞ்சல்
குறிப்பாக இதனுடன் இந்தியா முழுவதும் அனைத்து நெடவொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1ஜிபி மெமரியுடன் இலவச மின்னஞ்சல் அக்கவுன்ட் ஒன்றும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications