பிஎஸ்என்எல் மோடம் வைத்துள்ளீர்களா.? உடனே பாஸ்வேர்டை மாற்றவும்.!
பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனம் மலிவு விலையில் பல இணையசலுகைகளை வழங்கிவருகிறது, மேலும் தற்சமயம் 2000பிராட்பேண்ட் மோடம்களை மால்வேர் தாக்கியுள்ளது என செய்திகள் வந்துள்ளது.
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இந்தியாவில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவையில் ஒன்றாகும், மேலும் பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனம் மலிவு விலையில் பல இணையசலுகைகளை வழங்கிவருகிறது. மேலும் தற்சமயம் 2000பிராட்பேண்ட் மோடம்களை மால்வேர் தாக்கியுள்ளது என செய்திகள் வந்துள்ளது.
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பொறுத்தவரை இன்டர்நெட் வேகம் தற்போது அதிகமாய் குறைந்துவருகிறது, இந்நிலையில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவையில் பல சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம்:
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் பொதுவாக மலிவு விலையில் இன்டர்நெட் சேவையை வழங்கிவருகிறது, இந்தியா முழுவதும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் தற்போது இனைய வேகம் மிகவும் குறைந்துள்ளது எனத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

2000 பிஎஸ்என்எல் மோடம்:
தற்போது 2000 பிராட்பேண்ட் மோடம்களை மால்வேர் தாக்கியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது, இதனால் பல்வேறு பயனர்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ :
இம்மாத தொடக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல்கள், பெயர்கள் மற்றும் ஆதார் எண்கள் உள்ளிட்ட அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டன. தற்போது பிஎஸ்என்எல் சேவையில் 2000 மோடம்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவாஸ்தவா:
இந்த மால்வேர் தாக்குதல் விரைவில் சரிசெய்யப்படும் என வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் தலைவர் ஸ்ரீவாஸ்தவா பிடிஐ தகவல் தெரிவித்தார்.

கடவுச்சொற்கள்:
தற்போது அனைத்து பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களும் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மாற்றி அமைக்க வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது, சில பாதுபாப்பு செயல்முறைக்கு வேண்டி பிஎஸ்என்எல் நிறுவனம் பாஸ்வேர்டை மாற்றி அமைத்து பயன்படுத்துமாறு கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications