பண்டிகை கால சலுகை: கூடுதல் டேட்டா, கூடுதல் வேலிடிட்டி நாட்கள்- பிஎஸ்என்எல் பயனர்களே என்ஜாய்!
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்ட பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7 முதல் நவம்பர் 8 வரை ஒரு மாதம் நீடிக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்திருக்கிறது. சிறப்பு ப்ரீபெய்ட் திட்டங்களாக ரூ.247, ரூ.398 மற்றும் ரூ.499 விலையில் கூடுதல் செல்லுபடியாகும் திட்டங்களை அறிவித்திருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் 50 ஜிபி டேட்டா போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் வழங்குகிறது. இதன் டேட்டா வேகம் 80 கேபிபிஎஸ் ஆக இருக்கும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள், பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் ஈரோஸ் நவ் ஸ்ட்ரீமிங் நன்மைகளோடு வருகிறது. கூடுதல் செல்லுபடியாகும் நன்மைகளுடன் இந்த திட்டம் 35 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் இதுகுறித்து பேசுகையில் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது எஃப்யூபி மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மட்டுமின்றி வரம்பற்ற டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இது தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளோடு வருகிறது. இந்த திட்டம் ஐந்து நாட்களுக்கு கூடுதல் செல்லுபடியாகும். இது விற்பனை காலத்தில் அதன் ஒட்டுமொத்த செல்லுபடி நாட்களை நீடித்து 35 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.1999 பிஎஸ்என்எல் திட்டம்
பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.1999 ஆக இருக்கிறது. இதன் செல்லுபடியாகும் காலத்தை விட 30 நாட்களுக்கு கூடுதல் செல்லுபடியாகும். இதன் செல்லுபடியாகும் காலம் முழுவதும் 600 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது ஆண்டுத் திட்டமாகும். தரவு வரம்பு தீர்ந்துவிட்டால் வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தின் பிற நன்மைகள் பிஆர்பிடியுடன் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற பாடல் மாற்ற விருப்பத்துடன் வருகிறது. ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் 365 நாட்கள் செல்லுபடியுடன் வருகிறது. கூடுதல் செல்லுபடியாகும் தினங்களுடன் இந்த திட்டமானது 395 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

கூடுதல் டேட்டா சலுகை
கூடுதல் டேட்டா சலுகையுடன் பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.485 மற்றும் ரூ.499 ஆக இருக்கிறது. இது தினசரி 0.5 ஜிபி மற்றும் 1 ஜிபி கூடுதல் டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டங்கள் செல்லுபடியாகும் காலம் முழுவதும் தினசரி 1.5 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. பிஎஸ்என்எல் கூடுதல் செல்லுபடியாகும் காலம் மற்றும் கூடுதல் தரவு நன்மைகளுடன் வருகிறது. ரூ.499 திட்டம் மிகவும் நன்மை பயக்கும் திட்டமாகும். பண்டிகை கால சலுகையாக இந்த திட்டம் 35 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதோடு இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டாவை பெறுகிறது. ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 1.5 ஜிபி டேட்டா, எஃப்யூபி நன்மைகளுடன் 40 கேபிபிஎஸ் ஆக குறைத்து வழங்கப்படுகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ்கள் நன்மைகளை வழங்குகிறது.

இலவச 4ஜி சிம் கார்டு
இந்த ஆண்டு இலவச 4ஜி சிம் கார்டு வழங்கும் சலுகையை அறிவித்திருந்தது. இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இறுதி நாள் சலுகையை BSNL மீண்டும் நீட்டித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின் படி, BSNL டெல்கோ வரும் டிசம்பர் 31, 2021 ஆம் தேதி வரை இலவச 4 ஜி சிம் கார்டு வழங்கும் சலுகையை நீட்டித்துள்ளது.

ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள்
இந்த சலுகையின் அறிவிப்பின்படி, பிஎஸ்என்எல் முதல் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு ரூ. 100 அல்லது அதற்கு மேல் சலுகை வழங்கப்படும். அதேபோல், இலவச 4 ஜி சிம் கார்டையும் பயனர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை ஆரம்பத்தில் கேரள வட்டத்தில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கேரளா மற்றும் பிற வட்டங்கள் எதிர்காலத்தில் சலுகையைப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமது வட்டம் மிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications