ஜியோவுக்கு போட்டியாக மலிவு விலையில் புதிய பிளானை அறிவித்த பிஎஸ்என்எல்.!
ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது புதிய பிளான்களையும் அறிவித்து வருகின்றது. மிகவும் விலை குறைந்த விலையில், அதிக சலுகைகளுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து வருவது வாடிக்கையாள
ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது புதிய பிளான்களையும் அறிவித்து வருகின்றது.

மிகவும் விலை குறைந்த விலையில், அதிக சலுகைகளுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து வருவது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடை செய்து வருகின்றது.
வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் கூடுதல் டேட்டாவோடு உள்ளிட்ட சலுகைகைளையும் வாரி வழங்கி வருகின்றது. இதில்,
அபினந்தன் ரூ.151/- திட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.

பிஎஸ்என்எல் திட்டம்:
அபிந்தன் திட்டம் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், வரம்பற்ற அழைப்புகள், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட சலுகைகளை 24 நாட்களுக்கு வழங்குகின்றது.

புதிய பிளானில் 1.5ஜிபி :
தற்போது இந்த திட்டத்தின் டேட்டாவில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் முன்பு தினம் 1ஜிபி டேட்டா வழங்கி வந்ததது. தற்போது, 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் அனைத்து திட்டங்களிலும் கிடைக்கின்றது.

ஜியோ பிளான் அம்சம்:
ரிலையன்ஸ் ஜியோவில் 1.5 ஜிபி திட்டமானது ரூ.149/-க்கும் (28 நாட்கள்), 2ஜிபி திட்டமானது ரூ.198/-க்கும் (28 நாட்கள்) வழங்கப்படுகின்றது. இதனால் இந்த திட்டம் கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அபினந்த திட்டம் சிறப்பு:
டெல்லி மற்றும் மும்பை வட்டங்கள் உட்பட எந்தவொரு நெட்வொர்க்கும் நாம் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்புகளையும் செய்து கொள்ளலாம். ரூ.151/- திட்டமானது. 36 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். தினசரி வரம்பான 1.5 ஜிபி என்கிற அளவை அடைந்த பிறகு, டேட்டா வேகம் வேகமானது 40 கேபிபிஎஸ் ஆக குறையும்.

இந்த பிளான் திட்டம்:
கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று அறிமுகமான இந்த திட்டமானது. அடுத்த 90 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு விளம்பர சலுகை ஆகும். இந்த திட்டம் புதிய, இடம்பெயர்ந்த மற்றும் ஏற்கனவே உள்ள பிஎஸ்என்எல் இணைப்புகளுக்கும் பொருந்தும்.


Click it and Unblock the Notifications