Home
News

ஹேப்பி நியூஸ்.. BSNL 5G அறிமுக தேதி அறிவிப்பு.. எந்த மாதம் பயன்பாட்டிற்கு வரும்? இன்னும் கொஞ்ச நாள் தானா?

பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவைக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) சேவையின் பலனை அனுபவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய தகவல் இந்திய மக்களை குஷியடைய செய்துள்ளது. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் 5ஜி சேவைக்கான தொடக்க தேதியை இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இதனால், பிஎஸ்என்எல் 5ஜி எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்குமென்ற உறுதியான காலம் இப்போது தெரியவந்துள்ளது. BSNL 5G எப்போது இந்தியாவில் பயன்படுத்த கிடைக்கும் என்பது இங்கே.

அக்டோபர் 14 திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ​​பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவைக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் நெட்வொர்க் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆயிரக்கணக்கான மொபைல் டவர்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுமையாக பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேப்பி நியூஸ்.. BSNL 5G அறிமுக தேதி அறிவிப்பு.. எந்த மாதம் கிடைக்கும்?

BSNL 5G அறிமுக தேதி அறிவிப்பு.. எந்த மாதம் பயன்பாட்டிற்கு வரும்? ஹேப்பி நியூஸ் வந்தாச்சு:

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் கூறிய தகவலின் படி, BSNL நிறுவனம் வரும் ஜூன், 2025 காலவறைக்குள் அதன் சொந்த பிஎஸ்என்எல் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். யுஎஸ்-இந்தியா வியூகக் கூட்டாண்மை மன்றம் ITUWTSA நிகழ்வில் பேசிய அவர், 4G-யில் உலகத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்தியாவும் முன்னேறி வருவதாக கூறினார். அதேபோல், 5G இல் இந்தியா உலகளாவிய முன்னேற்றங்களை கண்டுள்ளது என்று கூறினார்.

எதிர்கால திட்டங்களில், மற்ற நாடுகளை விட வேகமாக இந்தியா அதன் 6G நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் வேறு எந்த மூலத்திலிருந்தும் உபகரணங்களைப் பயன்படுத்தாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவான உத்தரவை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் சிந்தியா எடுத்துரைத்தார்.

இதனால், சொந்த நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் நெட்வொர்க் அமைக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக செயல்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் ஒரு லட்சம் தளங்களை உருவாக்க BSNL திட்டமிட்டுள்ளது. அதேபோல், நேற்றைய தேதி வரை சுமார் 38,300 புதிய 4ஜி தளங்களைத் தொடங்கியுள்ளோம். என்று அவர் கூறியுள்ளார்.

1 லட்சம் பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள் நிறுவல்:

வெற்றிகரமாக, இந்தியாவில் 1 லட்சம் பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள் நிறுவப்பட்ட வேகத்தில், பிஎஸ்என்எல் அதன் சொந்த பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அறிமுகம் செய்யுமென்று கூறியுள்ளார். இது ஜூன் 2025க்குள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு 4ஜி இல் இருந்து அதே டவரில் 5ஜி வழங்கும் உலகின் ஆறாவது நாடாக நாம் இருப்போம் என்றும் அவர் கலந்தாய்வில் தெரிவித்திருக்கிரார்.

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது சி-டாட் மற்றும் உள்நாட்டு ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஆகியவற்றின் கூட்டமைப்பு உருவாக்கிய 4ஜி தொழில்நுட்பத்தை அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 22 மாதங்களில் 4.5 லட்சம் டவர்கள் நிறுவப்பட்டு, நாட்டின் 80 சதவீத மக்களுக்கு சேவை கிடைக்கச் செய்து, இந்தியா 5ஜி தொழில்நுட்பத்தை விரைவான வேகத்தில் செயல்படுத்தியதையும் அமைச்சர் சிந்தியா சுட்டிக்காட்டினார்.

4ஜி/5ஜி சேவைக்காக 1 லட்சம் புதிய டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 75 ஆயிரம் டவர்களை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 5ஜி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பைக் காட்டும் வகையில், அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ புதுப்பிக்க மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கணிசமான பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 5G Set To Roll Out In June 2025 and 38300 BSNL 4G Sites Now Live In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X