தமிழ்நாடு பயனர்களுக்கு அருமையாக பயன்படும் அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம்.!

|

ஜியோ நிறுவனம் ஒரு சில சலுகைகள் அறிவித்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து
திட்டங்களும் நல்ல வரவேற்பை பெருகிறது.

தமிழ்நாடு பயனர்களுக்கு அருமையாக பயன்படும் அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம்

அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை மற்றும் தெலுங்கானா வட்டங்களில் மட்டுமே அதன் 1500ஜிபி எஃப்.டி.டி.எச் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது, தற்சமயம் இந்த திட்டத்தை தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கு
பிஎஸ்என்எல் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஜூனியர் டெலிகாம் அதிகாரி ஒருவர் ட்வீட்டில் தெரியப்படுத்தியுள்ளார். அந்த ட்விட்டில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் அரசுக்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் ரூ.1,999 மதிப்புள்ள அதன் 1500 ஜிபி திட்டத்தை
சேலம், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, ராசிபுரம், நாமக்கல், வேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட நகரங்களில்அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு பயனர்களுக்கு அருமையாக பயன்படும் அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம்

இந்த 1500ஜிபி ஃபைபர்-டு-ஹோம் (எஃப்டிடிஎச்) திட்டமானது எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுடன் 1500 ஜிபி அளவிலான டேட்டாவை 200எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறிப்பிட்ட FUP வரம்பை அடைந்த பிறகு, இணைய வேகம் ஆனது 22Mbps ஆக குறைக்கப்படும், பின்பு இந்த 1500ஜிபி எப்டிடிஎச் திட்டம் ஆனது ஒடிசாவின் பாவனிபட்னா நகரத்திலும, புதுச்சேரி பகுதிகளிலும் கூட அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பயனர்களுக்கு அருமையாக பயன்படும் அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம்

எனவே சேலம், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, ராசிபுரம், நாமக்கல், வேலூர், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் ரூ.499 (100 ஜிபி வரை 20 எம்.பி.பி.எஸ்) என்கிற பேஸிக் திட்டம் முதல் ரூ.1,999 (200 எம்.பி.பி.எஸ் வரை 1500 ஜிபி வரை) திட்டம் வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட பிராட்பேண்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் தமிழ்நாடு தளத்தில் நேரலையில் இருக்கின்றன, பின்பு இந்த தகவலை முதலில் கண்டறிந்து வெளியிட்டது டெலிகாம் டால்கா வலைதளம் ஆகும். அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், இந்த திட்டம் முதலில் தெலுங்கானா மற்றும் சென்னை வட்டங்களில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள் ஆகும்.

தமிழ்நாடு பயனர்களுக்கு அருமையாக பயன்படும் அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம்

பின்பு பிஎஸ்என்எல் பவானிபட்னா ட்விட்டர் பக்கத்தில் ஒடிசாவின் பவானிபட்னா நகரத்தில் 1500ஜிபி பாரத் ஃபைபர் திட்டமும் பிற எஃப்டிடிஎச் திட்டங்களும் அணுக கிடைக்கின்றன. மேலும் 1500 ஜிபி திட்டம் புதுச்சேரியிலும் அணுக கிடைப்பதாக டெலிகாம் டால்க் வலைதளம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL 200Mbps 1500GB FTTH Plan Extended to More Cities And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X