Home
News

மணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.!

நகரத்தில் வசிக்கும் பெற்றோர்களே இன்று திருமணம் செய்ய ஜாதியை பார்ப்பது கிடையாது. வசதியை மட்டும் பார்த்து திருமணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருமணம் செய்யும் போது, மணமகளின் ஆதார் அட்டையில் ஜா

இன்றைய காலத்தில் ஆண்களும் பெண்கள் ஆன்லைன் வழியாக சேட்டிங் செய்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். ஜாதி மதம் இல்லாமலும் கலப்பு திருமணம் செய்து வருகின்றனர். தற்போது பெற்றோர் எதிர்பையும் மீறி காதல் திருமணங்கள் நடந்து வருகின்றன.

மணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்!

நகரத்தில் வசிக்கும் பெற்றோர்களே இன்று திருமணம் செய்ய ஜாதியை பார்ப்பது கிடையாது. வசதியை மட்டும் பார்த்து திருமணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருமணம் செய்யும் போது, மணமகளின் ஆதார் அட்டையில் ஜாதிப் பெயர் இல்லாதால், மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஆன்லைன் கால திருமணம்:

ஆன்லைன் கால திருமணம்:

தற்போது ஆன்லைன் காலத்தில் இருப்பதால், பெரும்பாலும் திருமணங்களை ஜாதம், ஜாதி மதம் இல்லாமல் திருமணம் செய்து வருகின்றனர்.
பிறகு ஒருவருக்கு ஒருவர் சேட்டிங் செய்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கு தடையாக ஜாதியோ இல்லை. மதமோ இருப்பது இல்லை. பெரும் பணம், இல்லை மனம் இருந்தாலே போதும்.

ஜாதிகளை அதிகம் விரும்புவது இல்லை:

ஜாதிகளை அதிகம் விரும்புவது இல்லை:

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் ஜாதிகளை பள்ளிச்சான்றிதழ்கள், ஓட்டர் ஐடி, ஆதார் அட்டை போன்றவைகளில் கூட தங்களின் ஜாதி பெயரை குறிப்பிடுவது குறைந்துவிட்டது. இருந்தாலும் ஒரு சில இடங்களில் ஜாதிப் பெயரை இவைகளில் குறிப்பிடுகின்றனர்.

பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம்:

பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம்:

இந்நிலையில், கிராமப்புறங்களில் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்களில் ஜாதி, ஜாதகம் பார்ப்பது என்பது முக்கியமாக இருக்கின்றது. இந்நிலையில் ஜாதியை மையப்படுத்தியே திருமணங்கள் நடக்கின்றன. இவைகளை கலச்சார திருமணம் என்று அழைக்கப்படுகின்றது.

ஆந்திர பெண்ணுக்கு திருமணம்:

ஆந்திர பெண்ணுக்கு திருமணம்:

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பெடகானியில் உள்ள கோயில் ஒன்றி திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துள்ளது. திருமணம் நேரத்துக்கு முன் திருமணம் தகவல்கள் பதிவு செய்ய மணமக்களின் ஆதார் கார்டுகளை கோவில் புரோகிதர் கேட்டுள்ளார்.

 ஜாதிப் பெயர் ஆதாரில் இல்லை:

ஜாதிப் பெயர் ஆதாரில் இல்லை:

இந்நிலையில், மகண்கள் கொடுத்த ஆதார் கார்டில் மணமகளின் தந்தை பெயருக்கு பின்னால் அவரது சாதி பெயர் இடம் பெறவில்லை. இதனை மணகளனின் வீட்டாரிடம் புரோகிதர் தெரிவித்தள்ளார். ஜாதியை ஏமாற்றி திருமணம் செய்வதாக சந்தேகம் அடைந்த மணமகன் வீட்டார் ஆதார் கார்டு விவகாரம் குறித்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

விளக்கம் அளித்தனர்:

விளக்கம் அளித்தனர்:

ஜாதிப் பெயரை தங்களுக்கு பெயருக்கு பின்னால் சேர்க்கும் வழக்கம் இல்லை என மணகள் வீட்டார் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத மணமகன் வீட்டார், மணமகளின் சொந்த ஊரிலும் விசாரித்துள்ளனர். ஊர் மக்களும் அதே விளக்கத்தை அளித்துள்ளனர்.

திருமணம் நிறுத்தப்பட்டது:

திருமணம் நிறுத்தப்பட்டது:

ஆனால் ஏற்க மறுத்த மகணமகன் வீட்டார் திருமணத்தை கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளனர். இதையடுத்து காவல் நிலையம் சென்று மணமகள் குடும்பத்தினர் எந்த காரணமும் இல்லாமல் திருமணத்தை நிறுத்தி விட்டதாக மணமகன் வீட்டார் மீது புகார் அளித்தள்ளனர்.

Best Mobiles in India

English summary
brides aadhaar card misses caste details groom family stops marriage : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X