பார்வை குறைபாடுகளை சரி செய்யும் செயற்கை கண் கண்டுபிடிப்பு..!!
2012 ஆம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் உலகில் மொத்தம் 285 மில்லியன் பேர் கண் பார்வையற்று வாழ்கின்றனர் என தெரியவந்திருக்கின்றது. கண் பார்வையில்லாமல் இவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சாதனை புரிந்து வருகின்றனர் என்றே கூற வேண்டும்.

உலகெங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் தரும் பல்வேறு கருவிகளை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பயோனிக் விஷன் ஆய்வாளர்கள் கண் பார்வையை வழங்கும் ஆரம்பக்கட்ட தொழில்நுட்பத்தினை வடிவமைத்திருக்கின்றனர்.

செயற்கை கண் மனித உடலில் பொருத்தப்பட்டபின் எதிரே இருக்கும் பொருட்களை ஓரளவு துல்லியமாக கண்டறிய முடியும் என இதன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய வகை கண்ணாடியானது பார்வையை அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

கண்ணாடிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா, மற்றும் இதர சென்சார்கள் பார்வையற்றவர்கள் பார்க்கும் பொருளை சிக்னல்களாக மாற்றி அதனை ஓரளவு தெளிவாக பார்க்க வழி செய்கின்றன. தற்சமயம் 96 எலகட்ரோடுகளை கொண்டு இயங்கும் இந்த செயற்கை கண், எதிர்காலத்தில் 1024 எலக்ட்ரோடுகளுடன் இயக்க வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த திட்டம் முழுமையடைந்த பின் அதிக துல்லியத்துடன் படங்களை பார்க்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications