ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இப்படியொரு சோதனையா? மக்களே உஷார்.!
சாம்சங், மோட்மோரோலா,சோனி,எல்ஜி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும்,அதுவும் ஆண்ட்ராய்டு பயனர்கள் அனைவரும் இதை தெரிந்துகொள்வது மிகவும் நல்லது.

விட்ச்(which?)
அதன்படி விட்ச்(which?) என்ற ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில்ää சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள்
மேலும் இந்த விட்ச்? ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல் அடிப்படையில் சுமார் 1பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள் இனிமேல் எந்தவிதமான பாதுகாப்பு அப்டேட்களையும் (Security update)பெறாது என்று கூறப்படுவதால், அந்த சாதனங்கள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் இருக்கின்றன.

இது தீம்பொருள் தாக்குதல்கள் மற்றும் தகவல் திருட்டு போன்றவைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது,மேலும் உலகெங்கிலும் இருக்கும் 40சதவிகிதம் ஆண்ட்ராய்டு பயளனர்கள் பாதுகாப்பு அப்டேட்களை பெறவில்லை என்பதும்இந்த ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்துள்ளனர்
அதிலும் மோட்டோரோலா, சாம்சங்,சோனி, எல்ஜி போன்ற பிராண்டுகளிலிருந்து ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்துள்ளனர், மேலும் அவற்றை எளிதில் ஹேக் செய்ய முடியும் என்பதையும் அவர்கள்கண்டறிந்துள்ளனர்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இருந்து ஹேக்கர்களால் குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட தகவல்களை எளிதில் திருடலாம் மற்றும் இந்த ஸ்மார்ட்போன்களின் மீதான முழுமையான கட்டுப்பாட்டையும் பெறலாம்.

பழைய போன்கள்
விட்ச் ஆராய்ச்சியாளர்கள் கூறியதன் அடிப்படையில், சமீபத்தில் பாதுகாப்பு ஆதரவுதனை இழந்த ஸ்மார்ட்போன்களுக்கு உடனடியாக எந்த சிக்கல்களும் இருக்காது எனவும் ஆனால் நாட்கள் செல்ல செல்ல பாதுகாப்பு அப்டேட்கள் எதுவும் சரியாக இல்லாமல் அவைகள் ஹேக் செய்யப்படுவதற்கான வாயப்புகள் அதிவேகமாக வளரும் எனவும் கூறியுள்ளனர்.கண்டிப்பாக பழைய போன்கள் ஆபத்து ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2012 அல்லது அதற்கு முன்பு அறிமுகமான ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு சிக்கல் உள்ளது என்று இந்த ஆய்வின் வழியாகத் தெரியவந்துள்ளது. மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி
நிறுவனமான விட்ச், தங்களின் இந்த கண்டுபிடிப்பை பற்றி அறிவிக்க கூகுளைத் தொடர்பு கொண்டதாகவும், ஆனால்
கூகுள் நிறுவனமோ இதுபற்றி பதில் கூறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விட்ச் நிறுவனத்தை சேர்ந்த கம்ப்யூட்டிங் எடிட்டர் ஆன கேட் பெவன், மில்லயன் கணக்கான பயனர்கள் ஹேக்கர்களுக்கு மில்லயன் கணக்கான பயனர்கள் ஹேக்கர்களுக்கு பலியானால் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், கூகுள் மற்றும் போன் உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நற்செயல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
எனவும் அவை எவ்வளவு காலம் நீடிக்கும், அது நிறுத்தப்படும் போது வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது
பற்றிய தெளிவான தகவல்களையும் அவர்கள் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், பயனர்கள் தாங்கள் எதை பதிவிறக்கம் செய்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது, மேலும் வைரஸ் தடுப்பு மற்றும் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் பயனர்களுக்கு இந்நிறுவனம் அறிவறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications