குறிப்பிட்ட வயது வரை எனது பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்கவேயில்லை : பில்கேட்ஸ்.!
தொழில்நுட்பம் என்பது அறிவியல் முறையையும், பொறியியல் கருவிகளையும் பயன்படுத்தி நுணுக்கமான வேலைகள் மூலம் திட்டங்களையும், வரையீடுகளையும் செயற்படுத்துவது தொழில் நுட்பமாகும்.
புதிதாக அறிமுகமாகும் நவீன தொழில்நுட்பங்கள் புதிய வசதியை அளிப்பதுடன் நடைமுறை பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் அமைந்துள்ளன. கணினி, ஸ்மார்ட் போன்கள், இணைய சேவை என ஏற்கனவே தொழில்நுட்பம் பல விதங்களில் நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட நிலையில் எதிர்காலத்தில் மேலும் பல நுட்பங்கள் நம் வாழ்வில் இணைய காத்திருக்கின்றன.
பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்கள் கூறியது தொழில்நுட்ப பயன்பாடு அனைவருக்கும் தேவைதான், அனைத்து இடங்களிலும் சிறந்த தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது, ஆனால் இப்போது குழந்தைகள் முழு நேரம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினியைப் பயன்படுத்துவது குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளனர், குறிப்பாக இப்போது குழந்தைகள் புத்தகம் எடுத்து படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

அறிவியல்:
தொழில்நுட்பம் என்பது அறிவியல் முறையையும், பொறியியல் கருவிகளையும் பயன்படுத்தி நுணுக்கமான வேலைகள் மூலம் திட்டங்களையும், வரையீடுகளையும் செயற்படுத்துவது தொழில் நுட்பமாகும். அதாவது விஞ்ஞான அறிவு முறைகளையும், பொறியியல் ரீதியான இயந்திரங்களையும் கொண்டு நுணுக்கமாக வேலைகளை மேற்கொள்ளுவதற்காகப் பயன்படுத்தப்படும் செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும்.

ஆசிரியர்:
ஆசிரியர் மாணவர்களுக்கு பயிற்சிகளைக் கொடுக்கிறார். அதனை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை கவனித்து தக்க ஆலோசனை வழங்கி புதிய முறைகளில் சிந்திக்கத் தூண்டுகிறார். எளிய தகவல்களைச் சொல்லி அதில் மாணவர்களின் எண்ணங்கள் தூண்டப்படும் இம்முறையில் கல்வி அறிவு சிறிது சிறிதாக அதிகரிக்கப்படுகிறது. ஆனால் இப்போது உள்ள குழந்தைகள் ஆன்லைனில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

பில் கேட்ஸ்:
2007 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான பில் கேட்ஸ், தனது குழந்தைகள் செல்போன்களை வைத்திருக்க அனுமதிக்கவில்லை, குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் வீடியோ கேம் விளையாடுவதை அவர் அனுமதிக்கவில்லை. காரணம் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் நமது கற்றல் திறமை பாதிக்கப்படும். மேலும் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் செல்போன் திரையையோ, கணினித்திரையையோ பார்க்க அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்தார்.

பாடக்குறிப்புகள்
வகுப்பறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் ஆனாலும் மாணவர்கள் ஆர்வத்துடனும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் பாடக்குறிப்புகள் அமைக்கப்பட வேண்டும். குறிப்புகள் எளிதில் புரியும்படி இருக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன்கள்:
ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை இப்போது குழந்தைகள் கூட அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதில் உள்ள வீடியோ கேம், சினிமா,நாடகம், போன்றவை குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் குழந்தைகளின் கற்றல் திறமை பாதிக்கப்படும்.

கல்வி:
கல்வி கற்க ஏற்ற சூழலை உருவாக்குதல்,கற்றலின் நோக்கத்தைப் புரியவைத்தல்,கல்வி உபகரணங்கள் மற்றும் பிற எழுதுபொருட்களை கிடைக்கும்படி செய்தல், அறிவுசார் மற்றும் உணர்வு சார் கல்விக்கூறுகளை சமமாக வழங்குதல். மாணவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் அவர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மூலம் சிறந்த கல்வி அறிவைப்பெறமுடியும். இப்போது உள்ள தொழில்நுட்பத்தை அதிக நேரம் பயன்படுத்தமால் இருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications