பில் கேட்ஸின் தந்தை மரணம்! அஞ்சலி செலுத்தும் விதமாக உருக்கமான கடிதம்.!
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை ஒரு புதுமையான தொழில்முனைவோராகவும், அவரது வேலையைச் செய்துமுடிக்க எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளாத, ஒரு எழுச்சியூட்டும் நன்கொடையாளராகவும் நாம் அனைவரும் அறிவோம்.

உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் பில்கேட்ஸ் என்றால் உலகின் மிகப்பெரிய பணக்காரர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைநிறுவனர் மற்றும் பில் ம்ற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆரம்பித்து உலகில் பல சமுதாய நற்காரியங்களை செய்து வருபவர்
என்றுதான் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் பில்கேட்ஸின் தந்தை பில்கேட்ஸ் சீனியர் அண்மையில் மரணமடைந்தார்,அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக பில்கேட்ஸ் அவர்கள் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

வாஷிங்டன் ஸ்டேட் பகுதியில் இருக்கும் கடற்கரை இல்லத்தில் வில்லியம் வசித்து வந்தார், வழக்கறிஞரான இவர் சமூகஆர்வலராகவும் இருந்து பல உதவிகளைச் செய்துள்ளார், அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த வில்லியமின் உயிர்கடந்த 14-ம் தேதி அமைதியாகப் பிர்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனது தந்தை குறித்துப் பகிர்ந்துள் பில்கேட்ஸ் அவர்கள் என் தந்தையின் ஞானம், தாராள மனப்பான்மை, இரக்கம் மற்றும் பணிவு ஆகியவை உலக அளவில் பல மக்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு வயது ஆக ஆகத்தான்
கிட்டத்தட்ட நான் செய்யும் அனைத்து விஷயங்களிலும் என் அப்பாவின் தாக்கம் மறைமுகமாக இருக்கிறது என்பதைஉணர்ந்து சந்தோஷப்பட்டேன்.

மேலும் மைக்ரோசாஃபட்டின் ஆரம்பக் காலங்களில் முக்கியமான கட்டங்களில் சட்டரீதியான ஆலோசனைகளைக் கேட்க என் அப்பாவைத்தான் அணுகினேன் என்று பில்கேட்ஸ் கூறினார. மேலும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இன்று இருக்கும் நிலை அப்பா இன்றி சாத்தியப்பட்ருக்காது. எல்லாவற்றையும் விட அறக்கட்டiயின் அறநெறிகளை அப்பா வகுத்தார. எங்களுடன் இணைந்து, விவேகமாகச் செயல்பட்டு, புதிய விஷயங்களைக் கற்று கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டினார்.

அதே நேரத்தில் நீச்சல் கால்பந்து போன்ற முடியாது என நினைத்திருந்த பல துறைகளிலும் தம்மை உந்தித் தள்ளியவர்தனது என்று கூறினார் பில்கேட்ஸ் அவர்கள். அதேபோல் பெண்களுக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும், குழந்தைகள மீது எப்படி அன்பு செலுத்தி வழிகாட்ட வேண்டும், மனிதர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதையெல்லாம் தமது தந்தையிடமிருந்து கற்று கொண்டதாகவும் கூறிகிறார் பில்கேட்ஸ்.

நீங்கள்தான் உண்மையான பில்கேட்ஸா என்று என் தந்தையிடம் கேட்பார்கள். உண்மை என்னவென்றால் என்னை எப்படி இருக்க வேண்டும் என்று முயல்கிறேனோ அது மொத்தமும் அவரிடம் இருந்தது. அப்பாவின் இழப்பை நான் ஒவ்வொரு நாளும் உணர்வேன் என்று பில்கேட்ஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications