வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.5 லட்சம்:அதுக்கு' நான் பொறுப்பில்லை: இளைஞர் செய்தது இதுதான்.!
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதுவும் பேடிஎம், போன்போ, கூகுள் பே போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். எனவே விரைவில் பணம் எடுத்து செலவு செய்வதற்கு இதுபோன்ற டிஜிட்டல் பேமெண்ட் செயலிகள் மிகவும் உதவியாக இருக்கிறது என்றே கூறலாம்.

இந்நிலையில் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த பணத்தை செலவு செய்த இளைஞர் ஒருவர் அதனை திருப்பித்தராமல், அது பிரதமர்மோடி அவர்கள் கொடுத்த பணம் தரமாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இருக்கும் பக்தியப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவரது வங்கி கணக்கில் கடந்த மார்ச் மாதம் ரூ.5 லட்சம் தவறுதலாக ககாரியா கிராம வங்கி சார்பில் டெபாசிட் செய்யப்பட்டது.

மேலும் அந்த கிராம வங்கி சார்பில் தவறு நடந்துவிட்டதை உணர்ந்து ரஞ்சித் தாஸுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பிபணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளது. ஆனால் அந்த நோட்டீஸைக் கண்டுகொள்ளாத ரஞ்சித் தாஸ் அந்தபணத்தை இஷ்டத்துக்கு செலவு செய்துவிட்டார்.

இதனை தொடர்ந்து கிராம வங்கி சார்பில் மான்ஸி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் போலீசார்நடத்திய விசாரணையில் ரஞ்சித் தாஸ் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. பின்பு அவரைக் கைது செய்தனர்.

அதன்பின்பு மான்ஸி போலீஸ் நிலையத் தலைமை அதிகாரி தீபக் குமார் கூறுகையில் நாங்கள் ரஞ்சித் தாஸிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அவரின் வங்கி கணக்கில் மார்ச் மாதம் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்.

மேலும் பிரதமர் மோடி அவர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறியிருந்தாரே அதில் முதல் தவணையாக 5.5 லட்சத்தை அளித்ததாக நினைத்தேன். அதனால் தான் பணத்தை செலவிட்டேன் என்று தெரிவித்தார். பின்பு தொடர்ந்துவிசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார் தலைமை அதிகாரி தீபக் குமார்.

குறிப்பாக வங்கி ஊழியர்கள் நடந்த தவறை விரிவாக எடுத்துக்கூறியுள்ளனர். பிரதமர் உங்கள் கணக்கில் பணம் போடவில்லை நாங்கள் செய்த பிழையால் இந்த தொகை வந்துவிட்டது எனக் கூறியுள்ளனர். ஆனாலும் அந்த இளைஞர் பணத்தை செலவு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை மீட்டால் ஒவ்வொருவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்ய முடியும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. எனவே தான் தன் வங்கிக் கணக்குக்கு டெபாசிட் செய்யப்பட்ட ரூ.5 லட்சத்தை மோடிதான் கொடுத்தார் என்று நம்பிய அந்த இளைஞர் பணத்தை செலவு செய்துவிட்டதாக கூறி தரமறுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications