ஜியோவிற்கு டாட்டா : ஏர்டெல் வழங்கும் 1000ஜிபி கூடுதல் டேட்டா ஆபர்.!
ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் இந்த பிக்பைட் திட்டத்தைப் பெற www.airtel.in/broadband என்ற வலைதளம் மூலம் செல்ல வேண்டும்.
தற்சமயம் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் புதிய டேட்டா ஆபர் மற்றும் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது அந்த வரிசையில் இப்போது ஏர்டெல் நிறுவனம் புதிய டேட்டா ஆபரை அறிவித்துள்ளது இந்த ஆபர் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய பிக்பைட் 1000ஜிபி டேட்டா ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பொறுத்துவரை பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் எனக் கூறப்படுகிறது.

வலைதளம்:
ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் இந்த பிக்பைட் திட்டத்தைப் பெற www.airtel.in/broadband என்றவலைதளம் மூலம் செல்ல வேண்டும்.

புதிய திட்டங்கள்:
ஏர்டெல் வழங்கும் ரூ.599 ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1199, அதன்பின் ரூ.1599 விலையில் புதிய திட்டங்களில்1000ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

2018 மார்ச் 31:
இந்த புதிய கூடுதல் பிக்பைட் டேட்டா ஆபர் பொறுத்தவரை 2018 மார்ச் 31 வரை செல்லுபடி ஆகும் என ஏர்டெல்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிராட்பேண்ட்:
இந்த புதிய பிராட்பேண்ட் இணைப்பை பெற வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்றவற்றை பதிவுசெய்ய வேண்டும். பின்பு வாடிக்கையாளர் அதிகாரியை தொடர்பு கொண்டு ஏர்டெல் பிராண்ட்பேண்ட் சேவைகளை
பெற முடியும்.

இண்டர்நெட்:
ஏர்டெல் இன்டர்நெட் வேகமானது மற்ற தொலைதொலைதொடர்பு நிறுவனங்களின் இன்டர்நெட் வேகத்தை விட சற்று அதிகமாக உள்ளதுஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தயாவில் நிலையான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள நிறுவனமாக ஏர்டெல் திகழ்கிறதென்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது,


Click it and Unblock the Notifications