Home
News

முந்துங்கள்: 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் பிரபல ஆன்லைன் நிறுவனம்!

பிரபல ஆன்லைன் நிறுவனம் தங்களுக்கு ஆன்லைன் ஆர்டர் அதிகரித்து வருவதால் 10 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,373-ஆக அதிகரிப்பு

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,373-ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,373-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது

266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்

266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்

அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உட்பட்டோர் மொத்தம் 3,373 பேரில் 266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

9 விழுக்காட்டினர் பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்

9 விழுக்காட்டினர் பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்

அதில், நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களில் 9 விழுக்காட்டினர் பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 42 விழுக்காட்டினர் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் எனவும் தெரிவித்தார்.

33 விழுக்காட்டினர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்

33 விழுக்காட்டினர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்

அதேபோல் குறிப்பாக 33 விழுக்காட்டினர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த தகவல் என்னவென்றால் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் 17 விழுக்காட்டினர் எனவும் கூறினார்.

21 நாட்களுக்கு ஊரடங்கு

21 நாட்களுக்கு ஊரடங்கு

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.

பிரபல நிறுவனமான பிக்பாஸ்கெட்

பிரபல நிறுவனமான பிக்பாஸ்கெட்

இதனால் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்கும் பிரபல நிறுவனமான பிக்பாஸ்கெட் புதிதாக 10,000 பேரை பணிக்கு சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பொது மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்டர்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆர்டர்களை விரைவாக டெலிவரி செய்யும் வகையில் ஆட்கள் தேவை

ஆர்டர்களை விரைவாக டெலிவரி செய்யும் வகையில் ஆட்கள் தேவை

இதையடுத்து நிலுவையில் உள்ள ஆர்டர்களை விரைவாக டெலிவரி செய்யும் வகையில் ஆட்கள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பணிநிமித்தம் செய்யப்படுபவர்கள் நிறுவனத்தின் கிடங்கு மற்றும் ஹோம் டெலிவரிக்கு பயன்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. பிக்பாஸ்கெட் அறிவித்துள்ள இந்த ஆள் எடுப்பு பணியானது 26 நகரங்களில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Bigbasket hire 10000 persons for home delivery and warehouse
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X