பீம் ஆப் வழியே இதுவரை ரூ.361 கோடி பணப்பரிமாற்றம்.!
பீம் ஆப் பணமில்லா பரிவர்த்தனையை எளிதாக்குகிற வகையில் மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
பெறுமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச்செய்த நடவடிக்கைக்குப் பின் மக்கள் எளிதாக பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக மத்திய அரசின் சார்பில் புதிதாக பீம் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் வழியாக மக்கள் ஆதார் எண் மூலம் எளிதாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ள இயலும்.

பீம் ஆப்:
இந்த ஆப்பானது சென்ற ஆண்டின் இறுதியில் 30-12-2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.அது முதல் இப்போது வரையிலும் இந்த பீம் ஆப் வழியாக 361 கோடி வரையிலும் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராவோ இந்திரஜித் சிங் இந்திய முன்பு பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வதில் 3% மட்டுமே இருந்ததாகவும் அது இப்போது 22% சதவிகிதம் வரையிலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ரூபாய்.361 கோடி: மக்கள் பீம் ஆப் வழியாக இதுவரையிலும் ரூ.361 கோடி பணப்பரிமாற்றம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
37 வங்கிகள்: மேலும்,இதுவரையில் 37 வங்கிகள் பீம் ஆப்பினோடு இணைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications