Just In
- 22 min ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 1 hr ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 2 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 2 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏர்டெல் அதிரடி: ஒரே ஒரு ரீசார்ஜ்; பின் ஆண்டு முழுவதும் டேட்டா+ வாய்ஸ்+ எஸ்எம்எஸ்.!
நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த ஏர்டெல் ரூ.995/- ஆனது ஆண்டு முழுக்க வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குவதோடு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் என ஆண்டு முழுவதும் மொத்தம் 36000 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் கடந்த சில வாரங்களாகவே மிகவும் ஆக்கிரோஷமான திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த ஆக்ரோஷமானது இன்று உச்சகட்ட நிலைக்கு சென்றுவிட்டது என்றே கூறலாம்.
ஆம், நாட்டில் தற்போது 290 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டுள்ள இந்த தொலைதொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர் தளத்தை தக்கவைத்துக்கொள்ளவும், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவை எதிர்க்கவும் ஒரு அதிரடியான மற்றும் ஆக்கிரமிப்பு மிகுந்த ஆண்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
பிரம்மாண்ட திட்டம்.!
இந்த மாபெரும் ஆண்டு திட்டமானது மொத்தம் 365 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. மொத்தம் மூன்று வகையான நன்மைகளை - அதாவது டேட்டா, குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை - வழங்கும் இந்த பிரம்மாண்ட திட்டமானது ஜியோவின் பெரும்பாலான திட்டங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.
ஆண்டு முழுவதும் மொத்தம் 36000 எஸ்எம்எஸ்.!
நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த ஏர்டெல் ரூ.995/- ஆனது ஆண்டு முழுக்க வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குவதோடு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் என ஆண்டு முழுவதும் மொத்தம் 36000 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
மாதந்தோறும் 1 ஜிபி அளவிலான டேட்டா.!
டேட்டா நன்மையை பொறுத்தமட்டில் ரூ.995/- ஆனது மாதந்தோறும் 1 ஜிபி அளவிலான டேட்டாவை ஆண்டு முழுக்க வழங்குகிறது. இது நிறுவனத்தின் செக்மெண்டட் (பிரித்தெடுக்கப்பட்ட) திட்டம் என்பதால் வாடிக்கையாளர் மற்றும் வட்டத்தை பொறுத்து வேறுபடும்.
வரவிருக்கும் வாரங்களில் அனைவருக்கும் உருட்டப்படலாம்.!
மற்றும் இந்த புதிய பார்தி ஏர்டெல் திட்டமானது தேர்ந்தெடுத்த வட்டாரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வண்ணம், வரவிருக்கும் வாரங்களில் ரூ.995/- ஆனது ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
வட்டத்திற்கு ஏற்ப வேறுபடும் ரூ.995/-ன் நன்மை.!
வட்டத்திற்கு ஏற்ப வேறுபடும் நன்மைகளை பொறுத்தமட்டில், ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.995 கட்டணத் திட்டமானது சில வட்டங்களில் மாதம் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி தரவு உட்பட, வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.
சில வட்டங்களில் அழைப்பு நன்மைகள் மட்டும்.!
இன்னும் சில வட்டாரங்களில், அதே ரூ.995/- ஆனது எஸ்எம்எஸ் நன்மை இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகள் (ரோமிங் அழைப்புகள்) மற்றும் 1 ஜிபி தரவு ஆகியவற்றை வழங்குகிறது. மற்றும் சில வட்டாரங்களில் இதே திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகளை மட்டுமே வழங்குகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.98/- திட்டம்.!
முன்னதாக அறிமுகமான ரூ.98/- ஆனது 5ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை ரூ.100/-க்கும் குறைவான விலை நிர்ணயத்தில் வழங்குகிறது. ப்ரீபெய்ட் தரவுத் திட்டமான ரூ,98/- ஆனது ரீசார்ஜ் செய்த நாளில் இருந்து மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். நன்மைகளை பொறுத்தமட்டில் இந்த திட்டம் 5 ஜிபி அளவிலான டேட்டாவை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது.
குரல் அழைப்பு சலுகையும் வழங்காது
18 மாதங்களுக்கு முன்பு, இதே அளவிலான டேட்டா சுமார் ரூ.255/- ஆக இருந்தது என்பதையும் இது ஒரு தரவு-நன்மை மட்டுமே வழங்கும் திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த ரூ.98/- ஆனது எந்தவிதமான குரல் அழைப்பு சலுகையும் வழங்காது என்று அர்த்தம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே
வழக்கம் போல், இந்த ரூ,98/- ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. தற்போது வரையிலாக இந்த திட்டம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் கிடைப்பதை டெலிகாம்டால்க். இன்ஃபோ உறுதி செய்துள்ளது.
ஐந்து முறைக்கு மேல் ரீசார்ஜ் செய்ய முடியாது
மேலும் இந்த திட்டத்தை ஒரு எண்ணில் ஐந்து முறைக்கு மேல் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதும், அதுவே டெல்லி வட்டத்தரத்தில் ஒரு முறை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் செய்திகளுடன் இணைந்திருங்கள்.
ஏர்டெல் அதிரடி: ஒரே ஒரு ரீசார்ஜ்; பின் ஆண்டு முழுவதும் டேட்டா+ வாய்ஸ்+ எஸ்எம்எஸ்.!
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் கடந்த சில வாரங்களாகவே மிகவும் ஆக்கிரோஷமான திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த ஆக்ரோஷமானது இன்று உச்சகட்ட நிலைக்கு சென்றுவிட்டது என்றே கூறலாம்.
ஆம், நாட்டில் தற்போது 290 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டுள்ள இந்த தொலைதொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர் தளத்தை தக்கவைத்துக்கொள்ளவும், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவை எதிர்க்கவும் ஒரு அதிரடியான மற்றும் ஆக்கிரமிப்பு மிகுந்த ஆண்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
ஏர்டெல் அதிரடி: ஒரே ஒரு ரீசார்ஜ்; பின் ஆண்டு முழுவதும் டேட்டா+ வாய்ஸ்!
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் கடந்த சில வாரங்களாகவே மிகவும் ஆக்கிரோஷமான திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த ஆக்ரோஷமானது இன்று உச்சகட்ட நிலைக்கு சென்றுவிட்டது என்றே கூறலாம்.
ஆம், நாட்டில் தற்போது 290 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டுள்ள இந்த தொலைதொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர் தளத்தை தக்கவைத்துக்கொள்ளவும், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவை எதிர்க்கவும் ஒரு அதிரடியான மற்றும் ஆக்கிரமிப்பு மிகுந்த ஆண்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
பிரம்மாண்ட திட்டம்.!
இந்த மாபெரும் ஆண்டு திட்டமானது மொத்தம் 365 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. மொத்தம் மூன்று வகையான நன்மைகளை - அதாவது டேட்டா, குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை - வழங்கும் இந்த பிரம்மாண்ட திட்டமானது ஜியோவின் பெரும்பாலான திட்டங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.
ஆண்டு முழுவதும் மொத்தம் 36000 எஸ்எம்எஸ்.!
நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த ஏர்டெல் ரூ.995/- ஆனது ஆண்டு முழுக்க வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குவதோடு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் என ஆண்டு முழுவதும் மொத்தம் 36000 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
மாதந்தோறும் 1 ஜிபி அளவிலான டேட்டா.!
டேட்டா நன்மையை பொறுத்தமட்டில் ரூ.995/- ஆனது மாதந்தோறும் 1 ஜிபி அளவிலான டேட்டாவை ஆண்டு முழுக்க வழங்குகிறது. இது நிறுவனத்தின் செக்மெண்டட் (பிரித்தெடுக்கப்பட்ட) திட்டம் என்பதால் வாடிக்கையாளர் மற்றும் வட்டத்தை பொறுத்து வேறுபடும்.
வட்டத்திற்கு ஏற்ப வேறுபடும் ரூ.995/-ன் நன்மை.!
வட்டத்திற்கு ஏற்ப வேறுபடும் நன்மைகளை பொறுத்தமட்டில், ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.995 கட்டணத் திட்டமானது சில வட்டங்களில் மாதம் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி தரவு உட்பட, வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.
சில வட்டங்களில் அழைப்பு நன்மைகள் மட்டும்.!
இன்னும் சில வட்டாரங்களில், அதே ரூ.995/- ஆனது எஸ்எம்எஸ் நன்மை இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகள் (ரோமிங் அழைப்புகள்) மற்றும் 1 ஜிபி தரவு ஆகியவற்றை வழங்குகிறது. மற்றும் சில வட்டாரங்களில் இதே திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகளை மட்டுமே வழங்குகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.
குரல் அழைப்பு சலுகையும் வழங்காது
18 மாதங்களுக்கு முன்பு, இதே அளவிலான டேட்டா சுமார் ரூ.255/- ஆக இருந்தது என்பதையும் இது ஒரு தரவு-நன்மை மட்டுமே வழங்கும் திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த ரூ.98/- ஆனது எந்தவிதமான குரல் அழைப்பு சலுகையும் வழங்காது என்று அர்த்தம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே
வழக்கம் போல், இந்த ரூ,98/- ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. தற்போது வரையிலாக இந்த திட்டம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் கிடைப்பதை டெலிகாம்டால்க். இன்ஃபோ உறுதி செய்துள்ளது.
ஐந்து முறைக்கு மேல் ரீசார்ஜ் செய்ய முடியாது
மேலும் இந்த திட்டத்தை ஒரு எண்ணில் ஐந்து முறைக்கு மேல் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதும், அதுவே டெல்லி வட்டத்தரத்தில் ஒரு முறை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் செய்திகளுடன் இணைந்திருங்கள்.
ரூ.99/- மற்றும் ரூ.319/- அறிமுகம்: பிஎஸ்என்எல் 'வாய்ஸ்' வாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.!
ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும் இரண்டு "மினி பேக்" தரவு திட்டங்களை அறிமுகப்படுத்திய கையேடு அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் பிரத்யேக வாய்ஸ் திட்டங்களை அறிவித்துள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட பிரத்யேக டேட்டா திட்டங்களான ரூ.7/- ப்ரீபெய்ட் திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளிற்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இணைய தரவை வழங்கும். மறுகையில் உள்ள பிஎஸ்என்எல் ரூ.16/- ஆனதும் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டு 2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது.
ரூ.99 மற்றும் ரூ.319
இந்நிலைப்பாட்டில் பிஎஸ்என்எல் ஆனது ரூ.99/- மற்றும் ரூ.319/- என்கிற இரண்டு புதிய வாய்ஸ் கட்டணத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களானது முறையே 26 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்குசெல்லுபடியாகும் மற்றும் இவைகள் வரம்பற்ற குரல் அழைப்புகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.
தரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்
இந்த புதிய வாய்ஸ் எஸ்டிவி-க்கள் ஆனது நிறுவனத்தின் தரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்களை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் ரூ.99/- ஆனது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் விலை அளவில் போட்டியிடுகிறது.
எஸ்எம்எஸ் நன்மை.?
ஜியோவின் ரூ.98/- ஆனது குரல் அழைப்பு மட்டுமின்றி மற்றும் தரவு சேவைகளையும் வழங்குகின்றது. உடன் பிஎஸ்என்எல் இந்த திட்டங்களுடன் எஸ்எம்எஸ் நன்மைகளையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இவைகள் முழுமையான வாய்ஸ் திட்டங்களாக இருக்கலாம்.
வரம்பற்ற குரல் அழைப்பு
ரூ.99/- என்கிற வாய்ஸ் எஸ்.டி.வி மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசுகையில், வீட்டு வட்டத்தில் உள்ள எந்தவொரு நெட்வர்க் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை மற்றும் , இது மும்பை மற்றும் தில்லி தவிர இதர அனைத்து வட்டத்திலும் தேசிய ரோமிங் அழைப்புகளையும் வழங்குகிறது.
பான்-இந்தியா அடிப்படையில்
மறுகையில் உள்ள ரூ.319/- ஆனது ரூ.99/0 வழங்கும் அதே சலுகைகளை அளிக்கிறது. ஆனால் ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். பான்-இந்தியா அடிப்படையில் இந்த திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்வதற்காக பிஎஸ்என்எல்-ன் வலைத்தளத்தை அணுகவும்.
28 நாட்கள் கூட இல்லை
துரதிருஷ்டவசமாக, ரூ.99/- திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வெறும் 26 நாட்கள் மட்டுமே, பிற ப்ரீபெய்டு எஸ்டிவிக்களை போன்று 28 நாட்கள் கூட இல்லை. எனவே, ஒரு வருடத்திற்கு, இதே திட்டத்தை 1பயன்படுத்த மொத்தம் 14 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தால் 13 முறை ரீசார்ஜ் செய்தால் போதும்.
குரல் அழைப்பு பயனர்களுக்கு மட்டும்தான்
மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- ஆனது 28 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளையும், 2 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. ஆக இந்த பிஎஸ்என்எல் ரூ.99/- திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு ஜிபி அளவிலான தரவாவது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறுவனம் தெளிவாக, இவைகளை குரல் அழைப்பு பயனர்களுக்கு மட்டும்தான் என்று கூறியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470