தொழில்நுட்ப ரீதியாக ஜியோவுடன் மோத பிரமாஸ்திரம் எடுத்த ஏர்டெல்.!
தற்போது ஜியோவுடன் நேரடியாக களத்தில் மோதும் அளவுக்கு ஏர்டெல் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கின்றது. இதை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அனைவரையும் மாறும்படி கேட்டு வருகின்றது.
ஜியோ நிறுவனம் துவங்கப்பட்டு குறைந்த காலத்திலேயே அதிகளவில் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது.
மேலும் பல்வேறு ஆப்பர்களையும் அறிவித்து வருகின்றது. தற்போது இந்தியாவில் முன்னணி நெட்வார்க்காக இருக்கின்றது.

மேலும் இந்த நிறுவனம் தற்போது 4ஜியில் சேவை வழங்கி வருகின்றது. தொழில் நுட்ப ரீதியாக இந்தியாவில் வலுவான நெட்வொர்க்காக ஜியா நிறுவனம் இருக்கின்றது.
தற்போது ஜியோவுடன் நேரடியாக களத்தில் மோதும் அளவுக்கு ஏர்டெல் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கின்றது. இதை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அனைவரையும் மாறும்படி கேட்டு வருகின்றது.

ஜியோ நிறுவனம் 4 ஜி சேவை:
ஜியோ நிறுவனம் ஆரம்பிக்கும் போதே 4 ஜி தொழில்நுட்பத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தொழில் நுட்பத்தில் பட்டி தொட்டி எங்கும் பரந்த விரிந்து சேவையாகவும் இருக்கின்றது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் லாபம் ஈட்டும் நிறுவனமாகவும் ஜியோ இருக்கின்றது. அளவில்லா லோக்கல், எஸ்டிடி கால்கள், ப்ரீ ரோமிங், ப்ரீ காலர் டியூன், தினமும் 100 எஸ்எம்எஸ், மிஸ்டு கால் அலர்ட் உள்ளிட் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.

ஜியோ நிறுவனம் தொழில்நுட்பம்:
ஜியோ நிறுவனம் தொழில் நுட்பரீதியாக 4 ஜியில் தற்போது வலுவான நெட்வொர்க்காகவும் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தொழில் நுட்பத்தாலும் ஏராளமான வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. மேலும் விரைவான சேவையும் லாபமாகவும் ஜியோ நிறுவனம் இயங்கி வருகின்றது.

4 ஜிக்கு மாற்றும் ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை ஓரே கட்டமாக 4 ஜி நெட்வொர்க்கிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இதுவரை பாரதி ஏர்டெல் நிறுவனம் 2 ஜி, 3 ஜி சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை அதிகவே 4 ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றப்பட இருக்கின்றது.

ஏர்டெல் 900 மொகா ஹெர்ட்ஸ் :
நிறுவன தலைவர் சுனில் மிட்டல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிவே இணைய சேவைக்கு மாற்றபடுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இதற்கென ஏர்டெல் நிறுவனம் 900 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம்மை பயன்படுத்த இருகின்றது.

அதிவேக இணைய சேவை:
சமீப காலங்களில் 4 ஜி நெட்வொர்க்கிற்கு அதிகளவு தேவை ஏற்பட்டுள்ளது. 900 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் 4 ஜி வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும். இதே நேரத்தில் எங்களின் 2 ஜி சேவை 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் மூலம் வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி கோப்பால் விட்டல் கூறியுள்ளார்.

வருமானம் இல்லாத 3 ஜி:
3 ஜி நெட்வொர்க்கில் வருமானம் இல்லை. 3 ஜி தொழில்நுட்ப முடிவு நெருங்கி விட்டது எனவும் கோப்பால் மிட்டல் தெரிவித்துள்ளார். ஏர்டெல் நிறுவனம் டிரான்சிஷன் வழிமுறையை கொண்டு தனது வாடிக்கையாளர்களை 3 ஜியில் இருந்து 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றுகிறது.

4ஜி கைவசம் வைத்துள்ளது:
இந்தியாவில் 16 வட்டாரங்கள் 116 யூனிட் அலைக்கற்றைகளை 900 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஏர்டெல் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கின்றது. கர்நாடகாவில் 4ஜிக்கு என்று சொந்தமாக 900 மெகா ஹெர்ட்ஸ் வைத்து இருக்கின்றது.

ரூ.25க்கு துவக்கம்:
தமிழ்நாடு, உபி, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் ஏர்டெல் நிறுவனம் முனைப்பு காட்டி வருகின்றது. மேலும், புதிய சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. இவற்றில் விலை ரூ.25 முதல் துவங்குகிறது.

பிரம்மா அஸ்திரம்:
தற்போது ஜியோ நிறுவனத்துடன் மோத ஏர்டெல் நிறுவனம் பிரம்மாஸ்திரமாக தொழில் நுட்மான 4 ஜியை கையில் எடுத்துள்ளது. அதே வேளையில் ஜியோ நிறுவனம் அடுத்த 2020ம் ஆண்டிற்குள் 5 ஜிசேவை நுழைந்து விடும் வாடிக்கையாளர்களையும் ஜியோ நிறுவனம் 5ஜிக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிடும்.


Click it and Unblock the Notifications








