Home
News

ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க: புது வருடம் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள கட்டணத்தை உயர்த்த திட்டமிடும் ஏர்டெல்.!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆரம்பித்துவிட்டன. தற்போது இந்நிறுவனங்கள் நாட்டில் சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை வழங்கியுள்ளன. ஆனால் கூடிய விரைவில் அனைத்து நகரங்களில் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் அதிகாரி..

உயர் அதிகாரி..

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் நாடு முழுவதும் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம்

குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம்

அதாவது இந்தியாவில் தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. எனவே இதனால் பயனர்கள் தவறாமல் மாதாந்திர குறைந்தபட்ச கட்டணத்திற்கு அவசியம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

 பிப்ரவரி மாதம்

பிப்ரவரி மாதம்

இந்நிலையில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் ஒன்றான ஏர்டெல் அந்த குறைந்தபட்ச கட்டணத்தை நாடு முழுவதும் வரும் பிப்ரவரி மாதம் உயர்த்துவது தொடர்பாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஹரியானா மற்றும் ஒடிசா

ஹரியானா மற்றும் ஒடிசா

அதேபோல் இதற்கு முன்னோட்டமாகக் கடந்த நவம்பர் மாதம் ரூ.99 என இருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.155 என ஹரியானா மற்றும் ஒடிசா பகுதிகளில் உயர்த்தி இருந்தது ஏர்டெல் நிறுவனம்.

99 டாக் டைம்

குறிப்பாக ரூ.99 ரீசார்ஜ் திட்டம் ஆனது 99 டாக் டைம், 28 நாட்கள் வேலிடிட்டி, 200 எம்பி டேட்டாவையும் வழங்கி கொண்டிருந்தது. தற்போது இந்த திட்டம் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக ரூ.155 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1ஜிபி டேட்டா நன்மை

ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த புதிய திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு குறிப்பிட்டபடி தற்போது ஹரியானா மற்றும் ஒடிசாவில்மட்டும் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை நிலவரம்

சந்தை நிலவரம்

அதேபோல் இப்போது இந்த இரண்டு பகுதிகளிலும் மட்டும் சோதனை ஓட்டம் தொடருவதாகவும். வரும் பிப்ரவரி மாதம் இதன் சந்தை நிலவரம் மற்றும் பயனர்களின் மத்தியில் நிலவும் கருத்து சார்ந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் இதனை விரிவு செய்வது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் அந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

மேலும் ஜியோ நிறுவனம் கூட அடுத்த ஆண்டு துவக்கத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஜியோ நிறுவனம் புது வருடத்தை முன்னிட்டு ஒரு அசத்தலான திட்டத்தையும், சலுகைகளையும் வழங்கியது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel plans to hike fares across India by February: Full details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X