சென்னையில் பார்தி ஏர்டெல் வோல்ட்இ சேவை அறிமுகம்.!
2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது வோல்ட்இ சேவைகளை கொண்டு மேற்கொள்ளப்படும் அழைப்புகளின் தரம் உயர்வாக இருக்கிறது.
தற்சமயம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்திவருகிறது, அதன்படி இப்போது சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதன் வோல்ட்இ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஜியோ நிறுவனத்தின் 4ஜி வோல்ட்இ சேவைக்கு போட்டியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மும்பை, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கோவா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 4ஜி வோல்ட்இ சேவைப் பயன்படுகிறது. இப்போது முதல் சென்னையிலும் 4ஜி வோல்ட்இ சேவை பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் வோல்ட்இ சேவைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் எந்தவொரு மொபைல், லேண்ட்லைன் நெட்வொர்க்கையும் அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோல்ட்இ சேவைப் பொறுத்தவரை கூடுதல் தரவு கட்டணங்கள் எதுவும் இருக்காது என ஏர்டெல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஏர்டெல் வோல்ட்இ வாடிக்கையாளர்களுக்கு எச்டி தர குரல் அழைப்புகள் மற்றும் அதிவேக இன்டர்நெட் வேகம் கொடுக்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வோல்ட்இ சேவைகளை வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ இந்த சேவையை வழங்கு்ம முதல் நிறுவனமாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மட்டும் வோல்ட்இ சேவையை வழங்கி வரும் நிலையில், இப்போது ஏர்டெல் தனது வோல்ட்இ சேவை அனைத்து இடங்களுக்கும் கொண்டு
செல்கிறது.
2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது வோல்ட்இ சேவைகளை கொண்டு மேற்கொள்ளப்படும் அழைப்புகளின் தரம் உயர்வாக இருக்கிறது.
மேலும் பல இடங்களுக்கு இந்த சேவை அருமையாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி ஹாட்ஸ்பாட் டாங்கிள் முந்தைய விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.1950-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு
ரூ.999-என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications