சரியான நேரத்தில் தரமான 3திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்.!
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் இந்நிறுவனம் 28நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ரூ.200-க்குள் அட்டகாசமான மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் ரூ.99, ரூ.129 மற்றும் ரூ.199 என மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்ததிட்டங்கள் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், இலவச ஜீ5 சந்தா, விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் போன்ற கூடுதல்சலுகைகளையும் வழங்குகின்றன.

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.99 மற்றும் ரூ.129 திட்டங்கள் பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்குகின்றன. ஆனால் இந்நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த ரூ.199-திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ.99-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தற்போது வரையில், ஜார்க்கண்ட், கொல்கத்தா, மத்திய பிரதேசம்,
சத்தீஸ்கர் மற்றும் பீகார் வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டத்தின் நன்மைகள் பொறுத்தவரை 1ஜிபி மொத்தடேட்டா, 100எஸ்எம்எஸ் மற்றும் 18நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்கும். இதே ரூ.99 திட்டம் ஒரிசா,ராஜஸ்தான்,
மேற்க வங்க வட்டங்களில் கூட ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

பின்பு இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.129-திட்டம் கூட ரூ.99வழங்கும் அதே நன்மைகளை வழங்குகிறது. ஆனால் 25நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டம் பீகார், குஜராத், ஹரியானா, கேரளா, கொல்கத்தா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கோவா, வட கிழக்கு, ஒரிசா, ராஜஸ்தான், உ.பி. கிழக்கு, உ.பி. மேற்கு உள்ளிட்ட வட்டங்களில்ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199-திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ்,வரம்பற்ற அழைப்பு நன்மைகளை மொத்தம் 24 நாட்களுக்கு வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்,அசாம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட், குஜராத்,ஹரியானா, கேரளா, கொல்கத்தா போன்ற இடங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.


Click it and Unblock the Notifications