ஏர்டெல் அளித்த புகாரின் எதிரொலி : ஜியோவிற்கு 'குறிப்பிட்ட' தடை.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 7 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மேல் ஜியோவில் இணைந்துள்ளனர்.!
புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ரிலையன்ஸ் ஜியோ இன்போம்காம் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பார்தி ஏர்டெல் கோரிக்கை விடுத்துள்ளது. ஜியோ இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்துள்ளது. நிராகரித்தார், மேலும் முற்றிலும் ஆதாரமற்றது என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து ப்ரீபெய்ட் சேவைகளையும் தடுக்க இந்த மாத தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் இவற்றில் பல்வேறு சிக்ல்கள் உள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்;
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 7 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மேல் ஜியோவில் இணைந்துள்ளனர், மேலும் இங்கு பல சிக்கல்கள் இவறறில் உள்ளதாக ஏர்டெல் புகார் தெரிவித்துள்ளது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு போன்றவற்றில் பல்வேறு விதிமீறல்' நடந்துள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜியோ தொலைத் தொடர்பு சேவைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜியோ அறிவித்துள்ளது.

ஏர்டெல்:
சந்தாதாரர் சரிபார்ப்பு வழிகாட்டுதல்களை மீறுவதன் மூலம், ஆர்ஜேஐஎல் தீவிர பாதுகாப்பு மீறலை ஏற்படுத்தியுள்ளது மற்றும் ஒருங்கிணைந்த உரிமத்தின் 39.11 (ஐ) விதிமுறைக்கு தண்டனையைப் பொறுப்பேற்க்கவேண்டும் என்று ஏர்டெல் நிறுவனம் மே30 அன்று தொலைத் தொடர்புத் துறைக்கு ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது.

ஜியோ:
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து ப்ரீபெய்ட் சேவைகளையும் தடுக்க இந்த மாத தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கான உள்வரும் அழைப்புகள் அனுப்பிவைக்கப்படும் என ஜியோ கூறியுள்ளது.

பாதுகாப்பு விதி மீறல்:
பாதுகாப்பு விதி மீறல் மற்றும் குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய்க்கு அபராதம் விதிக்க வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த மாநிலத்தில் ஜியோ நிறுவன உரிமத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு இன்னொரு அமைப்பு கூறியுள்ளது.

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட்:
ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகள் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது, எனவே ஜே&கே சேவையின் உரிமத்தை இரத்து செய்வதன் மூலம் ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஏர்டெல் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications