பெண் டாக்டரின் நெருக்கமான புகைப்படங்களை பேஸ்புக் இல் வெளியிட்ட காதலன்.!
பெங்களூரு: சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா(25) என்ற இளம்பெண், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றார்.
பெங்களூரு: சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா(25) என்ற இளம்பெண், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த நரேஷ்(26) பெயர் மாற்றப்பட்டுள்ளது, தனியார் பொறியியல் நிறுவனத்தில் ஜூனியர் இனையப் பொறியாளராக பெங்களூரில் பணியாற்றி வருகின்றார்.

ஸ்வேதா நரேஷ் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே பல ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கின்றனர். கல்லூரி படிப்பை முடித்து விட்டு பெங்களூரில் வேலைக்கு சேர்ந்த இருவரும் பெங்களூரில் தனியா வீடு எடுத்து லிவிங் டுகெதர் வாழ்க்கையைத் துவங்கி இருக்கின்றனர்.
2 ஆண்டுகள் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த காதலர்களுக்கு இடையியல் மனக்கசப்பு ஏற்பட்டுப் பிரிந்து இருக்கின்றனர். பிரிந்த காதல் ஜோடியினருக்கு இடையில் பல பிரச்சனைகள் அதற்குப் பின்பு தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கிறது.

ஸ்வேதாவின் பான் கார்டு, டெபிட் கார்டு, ஏ.டி.எம் கார்டு மற்றும் அவரின் சில நகைகள் என அனைத்தையும் நரேஷ் கைப்பற்றி கொண்டு அவருக்குக் கொடுக்க மறுத்திருக்கிறார். ஆத்திரம் அடைந்த ஸ்வேதா பெண்களுக்கான ஹெல்ப்லைன் இல் புகார் அளித்திருக்கிறார்.
ஸ்வேதா அளித்த புகாரின் பேரில் நரேஷ் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு, ஸ்வேதாவின் உடைமைகளை திருப்பிக் கொடுத்திருக்கிறார். ஆனால் ஸ்வேதா சார்பில் வந்த வக்கீல் 2 லட்சம் இழப்பீடு கேட்டு இன்னொரு புகாரையும் கொடுத்திருக்கிறார். 10 நாட்களுக்குள் பணத்தை கட்டும் பிடி அவருக்குத் தீர்ப்பு வந்த கோபத்தில் நரேஷ் ஸ்வேதாவின் நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
தற்பொழுது சைபர் கிரைம் போலீசார் நரேஷை கைது செய்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications