இந்தியாவில் தின்று பாக். விசுவாசம்- உயீர்நீத்த வீரர்களின் ஆன்மா மனிக்காது.!
புல்வாமா தாக்குதலை ஆதரிக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் செய்தியைப் பதிவிட்ட இளைஞர் மீதி வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: புல்வாமா தாக்குதலை ஆதரிக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் செய்தியைப் பதிவிட்ட இளைஞர் மீதி வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரை சேர்ந்த இளைஞர், இந்திய ராணுவத்தைத் தவறுதலாக விமர்சித்தும் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

ஆபித் மாலிக் மீது புகார்
காஷ்மீரை சேர்ந்த ஆபித் மாலிக், ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் தங்கி இருந்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத் ஆர்வலர், கிரிஷ் பரத்வாஜ் வியாழன் மாலை எச்.எ.எல் காவல் நிலையத்தில் மாலிக்கின் பேஸ்புக் பதிவு பற்றி புகார் அளித்துள்ளார்.

பெங்களூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்
மாலிக்கின் பேஸ்புக் தகவலின் படி, மாலிக் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது.ஹென்னுர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். தற்பொழுது அவர் அந்நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்பது முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

பேஸ்புக் பக்கம் டெலீட்
வியாழன் அன்று மாலிக் பதிவிட்ட பேஸ்புக் பதிவு சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகியது. வெள்ளிக்கிழமை காலை அவரின் பேஸ்புக் பக்கம் பேஸ்புக்கில் இருந்து டெலீட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்குப் பதிவு
தற்பொழுது மாலிக் மீது 153 (அ) பகைமை ஊக்குவித்தல்), 124 (அ) (தேசபக்தி) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுள்ளதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.

கைது
காவல்துறை சேகரித்துள்ள மாலிக்கின் தனி விபரங்கள் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, விரைவில் மாலிக் கைது செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








