Home
News

நாசா வெளியிட்ட பூமியின் அழகான புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்.!

நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்ட நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது, செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்படித்து அனுப்பி வருகிறது.

 கிரகத்தில் அனுப்பப்பட்ட ரோவர் உடன்

செவ்வாய் கிரகத்தில் அனுப்பப்பட்ட ரோவர் உடன் சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று அனுப்பப்பட்டது. செவ்வாய் கிரகத்தின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் பெர்சவரன்ஸ் விண்கலம் ஈடுபட்டு வருகிறது. இந்த விண்கலத்துடன் இன்ஜெனியூனிட்டி எனப்படும் சிறிய ரக ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பறந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன்

மேலும் இன்ஜெனூட்டி என இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் அழைகப்படும். வரலாற்றில் முதல்முறையாத பூமிக்கு வெளியே ஹெலிகாப்டர் பறக்க வைக்கப்படுகிறது. பெர்சவரன்ஸ் ரோவர் வயிற்றுப்பகுதியில் சிறிய ரக ஹெலிகாப்டர் பொருத்தப்பட்டிருந்தது. சிறியரக ஹெலிகாப்டர் முன்னதாகவே பறக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த திட்டத்தை நாசா ஒத்தி வைத்தது.

டும் குளிரை சமாளிப்பதே

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், கடும் குளிரை சமாளிப்பதே இதன் அடுத்த இலக்காக இருக்கும் என கூறப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் -90 டிகிரி வெப்பநிலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் மோசமான வானிலை காரணமாக அந்த விண்கலம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் ஏற்பட்டு வரும் புழுதிப்புயல் காரணமாக விண்கலத்தின் பல பகுதிகளில் தூசி நிறைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பல காரணங்களால் பேனல் சூரிய ஒளியை பெற முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

முடியாத நிலை தொடர்ந்து

சூரிய ஒளியை பெற முடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டால் வரும் காலங்களில் லேண்டர் செயலற்று போகும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த நிலையை தடுக்கும் நடவடிக்கையாக பேட்டரி செயல்திறனை தக்க வைத்துக் கொள்ள நாசா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் ஒருபகுதியாக லேண்டரில் பல பகுதிகளை செயலற்ற நிலையில் வைக்க நாசா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

சா அனுப்பிய ரோவர் ஆனது எளிஸியம் பிளாண்டியா என்ற

நாசா அனுப்பிய ரோவர் ஆனது எளிஸியம் பிளாண்டியா என்ற பகுதியில் தரையிறக்கப்பட்டது. இந்த பகுதியில் ஜூலை மாத இறுதியில் குளிர்காலம் நிறைவு பெறும் எனவும் அதன்பிறகே சூரிய ஒளியை லேண்டர் மீண்டும் பெற முடியும் என தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவு குறித்து பார்க்கையில், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செவ்வாய் கிரக நிகழ்வுகளை கணக்கிட முடியாது எனவும் அதன்பிறகு லேண்டர் செயலிழக்காமல் அதன் பணியை தொடரும் என கணிக்கப்படுகிறது.

நாசா பூமியில் உள்ள நிலம், நீர், ப

இந்நிலையில் நாசா பூமியில் உள்ள நிலம், நீர், பனி என அதன் அமைப்பை விண்வெளியில் இருந்து அழகாக படம் பிடித்து அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த படங்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் நாம் நிலத்தில் இருந்தாலும், விண்வெளியில் இருந்தாலும் சரி இந்த நீல நிற கிரகத்தில் நாம் என்னென்றும் ஒன்றுபட்டுள்ளோம்அது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என அந்த படங்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளது நாசா அமைப்பு.

Best Mobiles in India

English summary
Beautiful photos of the Earth released by NASA: Viral on the Internet: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X