Home
News

அப்போ FASTag கதை முடிஞ்சுதா.. டோல் கேட்களில் கார், ஜீப், வேன் நிற்காமல் போக புது ரூல்ஸ்.. எப்போது அமல்?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆன நிதின் கட்கரி, தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற சுங்க கட்டண முறையை (Barrier-free tolling) அறிமுகப்படுத்த போவதாக அறிவித்ததை தொடர்ந்து, இது எப்போது அமலுக்கு வரும்? எங்கெல்லாம் நடைமுறைக்கு வரும்? இனி பாஸ்டாக் நிலை என்ன? என்கிற கேள்விகள் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளன. அதுகுறித்து இங்கே விரிவாக பார்ப்போம்.

தடையற்ற சுங்க கட்டணம் என்றால் என்ன? பிஸிக்கல் தடைகளை கொண்ட வழக்கமான சுங்கச்சாவடிகளை போலல்லாமல், இந்த அமைப்பானது சென்சார்கள் மற்றும் கேமராக்கள் (sensors and cameras) பொருத்தப்பட்ட மேல்நிலை சட்டகங்களை (overhead frames) பயன்படுத்தி, வாகனங்களை தானாகவே அடையாளம் கண்டு, நிகழ்நேரத்தில் சுங்க கட்டணங்களை கழிக்கிறது.

டோல் கேட்களில் நிற்காமல் போக புது ரூல்ஸ்.. எப்போது அமல்?

அதாவது மல்டி-லேன் ப்ரீ ப்ளோ (Multi-Lane Free Flow) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட தடையற்ற சுங்க கட்டண முறையானது, வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்பதை முற்றிலுமாக தவிர்க்க உள்ளது. லாஜிஸ்டிக்ஸ் சக்தி உச்சி மாநாடு மற்றும் விருதுகள் 2026-ல் இந்த அறிமுகம் அறிவிக்கப்பட்டது. அங்கு, இந்தியாவின் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும், தளவாட செலவுகளை குறைப்பதிலும் இதன் பங்கை, அமைச்சர் கட்கரி எடுத்துரைத்தார்.

எப்போது அமலுக்கு வரும்? எங்கெல்லாம் நடைமுறைக்கு வரும்? அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ள தேசிய நெடுஞ்சாலைக்ளுக்கான தடையற்ற சுங்க கட்டண முறை ஆனது உடனடியாக அமலுக்கு வரப்போவதில்லை. இது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.

இது முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தான் அறிமுகம் ஆகும், பின்னர் விரிவாக்கம் அடையலாம். இந்திய அரசாங்கத்தின் இந்த முயற்சியானது, சுங்கச்சாவடிகளில் (Toll Gate) ஏற்படும் நீண்ட வரிசைகளை அகற்றுவதையும், மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை (Advanced digital technologies) பயன்படுத்தி போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

ஃபாஸ்டேக் மற்றும் ஏஐ கேமராக்களின் பங்கு: இந்த அமைப்பு ஃபாஸ்டேக்கை தானியங்கி வாகன பதிவு எண் அங்கீகார (ANPR) தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது. ஆகையால் ஃபாஸ்டேக் எங்கும் போகாது, இந்த அமைப்பின் கீழ் "வழக்கம் போல"செயல்படும். இதோடு உயர் செயல்திறன் கொண்ட ஏஐ கேமராக்களும் இணையும். இது வாகன பதிவு எண்களை "ரீட்" செய்யும். அதே நேரத்தில் ஆர்எப்ஐடி (RFID) ரீடர்கள் ஃபாஸ்டேக் (FASTag) ஸ்டிக்கர்களை ஸ்கேன் செய்யும்.

பின்னர், சுங்க கட்டண தொகை இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து நேரடியாக கழிக்கப்படும். இந்த இரட்டை சரிபார்ப்பு அமைப்பு துல்லியத்தை உறுதிசெய்து, பிழைகளை குறைக்கிறது. ஃபாஸ்டேக் செயல் இழந்திருந்தாலோ அல்லது காணாமல் போனாலோ, வாகனத்தை அதன் பதிவு எண் மூலம் அடையாளம் காண முடியும், இது சட்ட அமலாக்கத்தின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.

சாலை பயனாளர்களுக்கு இது எவ்வாறு பயனளிக்கிறது? வாகன ஓட்டிகளுக்கு, இந்த அனுபவம் மிகவும் சுமுகமாக இருக்கும். வாகனங்கள் வேகம் குறைக்காமல், சுங்கச்சாவடிகள் வழியாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கலாம். நிறுத்தவோ, காத்திருக்கவோ, அல்லது சுங்கச்சாவடி ஊழியர்களுடன் உரையாடவோ வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த அமைப்பு பின்வருவனவற்றைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது:
- நெடுஞ்சாலைகளில் பயண நேரத்தை குறைக்கும்
- சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நெரிசலை நீக்கும்
- வாகனம் வெறுமனே இயங்குவதை தவிர்ப்பதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தலாம்

அமலாக்கம் மற்றும் அபராதங்கள்: இந்த புதிய அமைப்பில் கடுமையான அமலாக்க முறையும் உள்ளது. சுங்க கட்டணம் செலுத்தத் தவறும் வாகனங்களுக்கு மின்னணு அறிவிப்புகள் (e-notices) அனுப்பப்படும். தொடர்ந்து விதிகளை மீறினால், ஃபாஸ்டேக் இடைநீக்கம் மற்றும் வாகன (VAHAN) தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்ட அபராதங்கள் விதிக்கப்படலாம். அதாவது - ரொக்கமாக பணம் செலுத்தும் வசதிகள் இல்லாததால், முழுமையான இணக்கத்தை உறுதிசெய்யும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார தாக்கம் மற்றும் பரந்த கண்ணோட்டம்: தடையில்லா சுங்க கட்டண முறையானது, தற்போதைய ரூ. 50,000 - ரூ.60,000 கோடி சுங்க கட்டண வசூலில் இருந்து ஆண்டுக்கு ரூ.8,000 கோடி வரை சேமிப்பை உருவாக்கும் என அரசாங்கம் மதிப்பிடுகிறது. இது வருவாய் இழப்புகளை தடுத்து, செயல்திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை, தளவாட செலவுகளைக் குறைக்கும் இந்தியாவின் பரந்த இலக்குடன் ஒத்துப்போகிறது. ஐஐடி சென்னை, ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐஎம் பெங்களூரு ஆகியவற்றின் சமீபத்திய ஆய்வுகளின்படி, மேம்படுத்தப்பட்ட சாலை உள்கட்டமைப்பு, தளவாட செலவுகளை ஏற்கனவே 16 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த செலவை மேலும் குறைத்து, இந்தியாவை உலகளாவிய தரநிலைகளுக்கு நெருக்கமாக கொண்டுவருவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Barrier Free Tolling From December 2026 What is Role Of FASTag And AI Cameras in This New System
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X