பாகுபலி 2 + 4கேடெக் + விஎப்எக்ஸ்= பிரம்மாண்டம்
நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொண்டு வியக்கவைத்த பாகுபலி..
இந்திய திரைப்படத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை கொண்டுள்ளது பாகுபலி..!
இந்திய அளவில் மிகப்பெரிய மனிதர்கள் உழைப்பு மற்றும் அதிக அளவு பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமானத் திரைப்படம் பாகுபலி.
பல்வேறு மக்களின் எதிர்பார்ப்பில் உருவான இத்திரைப்படம் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு உலகஅளவில் தனிசிறப்பு பெற்றுள்ளது. மேலும் பாகுபலி இரண்டாம் பாகம் பலவரவேற்ப்பை பெற்றுள்து.
பெரும்பாலும் பாகுபலி திரைப்படம் கணினிவரைக் கலை மற்றும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொண்டு உருவாகி உள்ளது. இதன் காட்சிப் பொருத்தமாட்டில் மக பிரம்மாண்டம் ஆக உருவாகி உள்ளது. இதன் விர்ச்சுவல் எபெக்ட் பகுதிக்கு உலகெங்கும் அதிக பாரட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

வியக்கவைக்கும் பாகுபலி:
பாகுபலி இயக்குநர் ராஜமௌலி தற்போது இந்திய அளவில் மிக்பெரிய சரித்திர திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதன் முதல் பாகத்தில் அதிகமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாபெரும் வெற்றியை அடைந்தார். தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் வியக்கவைக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகப் பெரிய சாதனையை புரிந்துள்ளார்
இயக்குநர் ராஜமௌலி.

புதிய தொழில்நுட்பம்:
இந்திய இயக்குநர்களில் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் முதன்மையாக இருப்பவர்கள் இயக்குநர் சங்கர் மற்றும் தற்போது
ராஜமௌலி அவர்கள். தற்போது இயக்குநர் சங்கர் ரோபோட் 2.0-வில் முற்றிலும் 3டி இல் படப்பிடிப்பு நடத்தினார்.

ஆசிய சினிமாஸ்;
தற்போது அனைத்து தியேட்டர்களில் 4கே ப்ரொஜக்டர் அமைக்கப்பெற்று வருகின்றன. தேவையான மாற்றங்கள் கொண்டு தற்போது ஆசிய சினிமா தியேட்டர்கள் இயங்கிவருகின்றன.

4கே தொழில்நுட்பம்:
பாகுபலி இரண்டாம் பாகம் முற்றிலும் 4கே-வாக மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் துள்ளியமான காட்சிப்பதிவுகள் அனைவரையும் வியக்கவைக்கும் வகையில் உள்ளது. இதன் ஆடியோ பதிவுகள் மிகப்பிரம்மாண்டமாக உள்ளது.


Click it and Unblock the Notifications