ப்ரீசார்ஜ் நிறுவனத்தை ரூ.385 கோடிக்கு கைப்பற்றியது ஆக்சிஸ் வங்கி
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி, ப்ரீசார்ஜ் நிறுவனத்தை ரூ.385 கோடிக்கு வாங்கியதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி, ப்ரீசார்ஜ் நிறுவனத்தை ரூ.385 கோடிக்கு வாங்கியதாக அறிவித்துள்ளது. ப்ரீசார்ஜ் என்ற பெயரில் இயங்கி வந்த ப்ரீசார்ஜ் பேமெண்ட் டெக்னாலஜி பிரைவட் லிமிடெட் மற்றும் ஆக்சிலிஸ்ட் சொலுசன் பிரைவைட் லிமிடெட் நிறுவனங்களின் பங்குகளை ஆக்சிஸ் வங்கி 100% வாங்கிவிட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான சில அனுமதிக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும், அனைத்தும் வரும் செப்டம்பர் 2017க்குள் முடிவடைந்து ஆக்சிஸ் வங்கி முழுமையாக ப்ரீசார்ஜ் நிறுவனத்தை கையகப்படுத்தும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்போது ஆக்சிஸ் வங்கி மொபைல் வங்கி, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ஃபோரக்ஸ் கார்ட் மற்றும் UPI பேமெண்ட் ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கி நாட்டில் 4,33,000 Pos மிஷின்கள் வைத்து இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்சங் பே, கொச்சி மெட்ரொ மற்றும் BMTC ஆகியவற்றின் பேமெண்ட்களில் ஈடுபட்டு வருகிறது
ஆக்சிஸ் வங்கியின் சி.இ.ஓ ஷிக்தா ஷர்மா, ஃப்ரிசார்ஜ் நிறுவனத்தை வாங்கியது குறித்து கூறுகையில், :ஃப்ரிசார்ஜ் நிறுவனத்தை வாங்குவதன் மூலம், நிதி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதற்கு வழி வகுக்கும் அச்சுறுத்தலை ஆக்ஸிஸ் வங்கியின் மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் மொபைல் முதல் இளம் நுகர்வோர் சேவையை வழங்குவதற்கு ஃப்ரிசார்ஜ் கணிசமான பங்களிப்பை அளிப்பதாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம்;' என்று கூறியுள்ளார்,.
ஸ்னாப்டீல் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ குணால் பாஹல் இதுகுறித்து கூறுகையில், 'ஆக்சிஸ் மற்றும் ஃப்ரிசார்ஜ் இணைப்பு, டிஜிட்டல் பணம் மற்றும் வங்கி பரிமாற்றத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த ஒன்றுறாக கருதப்படுகிறது.
இது இந்தியாவில் நிதி சேவைகளில் ஏராளமான மற்றும் புதுமையான தொழில்நுட்ப திறன்களை ஆக்சிஸ் கொடுக்கும்போது எங்கள் முக்கிய இ-காமர்ஸ் வணிகத்தில் கவனம் செலுத்துவதற்கு ஸ்னாப்டீல் நிறுவனத்தை அனுமதிக்கிறது
50 மில்லியனுக்கும் அதிகமான ரிஜிஸ்டர் செய்யப்பட்ட பயனாளிகள் மற்றும் 2,00,000 வணிகர்கள் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதோடு அதன் பயனாளர்களில் 75 சதவிகிதத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பரிவர்த்தை செய்து கொண்டு உள்ளனர் என்பது ஃப்ரிசார்ஜின் சிறப்புகளில் ஒன்று. இதில் 85 சதவிகித வாடிக்கையாளர்கள் மொபைல் சாதனத்தில் இருந்து தங்கள் நிதி சேவைகளை அணுகுவதைக் கொண்டுள்ளனர்.
ஃப்ரிசார்ஜின் இணைப்பு ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களை அடுத்த லெவல் டெக்னாலஜிக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. வாடிக்கையாளர்களின் எதிர்கால தொழில்நுட்பத்தை அணுகுவதற்கு இந்த தளம் உதவி செய்கிறது.
மேலும் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கு உதவியாக இருக்கும், அதுமட்டுமின்றி புதிய டிஜிட்டல் உள்ளூர் வாடிக்கையாளர்களை ஒரு திறமையான முறையில் அணுகுவதற்கும் இந்த இணைப்பு உதவும்.


Click it and Unblock the Notifications