வங்கியில் இருந்து பேசுவதாக ஐபிஎஸ் அதிகாரியிடம் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் அபேஸ்.!
ஆனால் சாதாரண மனிதர்கள் ஏமாந்தால், அது பெரிய விஷயமாக கருத்தப்படுவதில்லை. இந்நிலையில் இதே பாணியில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியே ஏமாந்து இருப்பது தான் தற்போது அடிமுட்டாள் தனமானதாக மக்கள் நினைக்கின்றனர். சட்டம்
தற்போது வங்கி அதிகாரி போல பேசி நூதன முறையில் பொது மக்களிடம் பணம் கொள்ளையடிக்கப்படு வாடிக்கையாகியுள்ளது. இதில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஏமாந்து வருது தொடர்கதையாகி உள்ளது.
வங்கியிருந்து பேசுவதாக கூறி செல்போனில் உரையாடலை முதலில் தொடங்குவார்கள். ஆனால் மேலும் உங்களின் வங்கியில் உள்ள ஏடிஎம் கார்டு எண் காலாவதியாகி விட்டது. ஆகையால் ஏடிஎம் கார்டு எண், சிவிவி எண், ஓடிபி எண் ஆகிய வற்றை பெற்று கொண்ட, பிறகு உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோவது நிச்சயம்.

ஆனால் சாதாரண மனிதர்கள் ஏமாந்தால், அது பெரிய விஷயமாக கருத்தப்படுவதில்லை. இந்நிலையில் இதே பாணியில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியே ஏமாந்து இருப்பது தான் தற்போது அடிமுட்டாள் தனமானதாக மக்கள் நினைக்கின்றனர். சட்டம் தெரிந்தவரே சாதாரணமாக ஏமாந்துள்ளார் என்று ஒரு புறமும் நகைச்சுவையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரூ.2 லட்சம் அபேஸ் ஆகியுள்ளது.

வங்கி ஏடிஎம்கார்டு :
தற்போது வங்கி ஏடிஎம்கார்டுகள் பெரும்பாலும் மக்களிடம் பயன்பாட்டில் இருக்கின்றது. இதனால் ஏராளமான மக்கள் அதன் மூலம் பணப்பயன்பாட்டிற்கு வந்துள்ளனர். மேலும், ஆன்லைன் மூலம் பொருட்களை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

வங்கி ஏடிஎம் கார்கார்டுகளுக்கு காலவதி தேதி:
கலாவதி தேதி வங்கி ஏடிஎம்கார்டுகளுக்கு கார்டுகளுக்கு குறைந்தது மூன்று ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை வங்கிகளை பொறுத்து கொடுக்கப்பட்டிருக்கும். வங்கி ஏடிஎம் கார்ட்டின் பயன்பாடு முடிந்து விட்டால் , நமக்கு வங்கியிருந்து தானகவே அல்லது வீட்டின் முகவரிக்கு வந்து விடும். மேலும் இல்லை என்றால் இ மெயில் மூலம் தகவலை அனுப்பியும் கெரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வங்கியில் இருந்து எப்போதும் அழைப்பு வராது:
மேலும் வங்கியிருந்து எப்போதும் எந்த நிலையிலும் இருந்தும் யாருக்கும் ஏடிஎம்கார்டு காலவதியானால் ஒரு போதும் அழைப்பு வராது. ஆனால் இதையறியாமல் பொது மக்கள் வங்கியிருந்து பேசுவதாக கூறினால், இதை நம்பி ஏடிகார்டு நம்பர் முதல் ஓடி வரை கொடுத்து விடுகின்றனர். ஏமாந்து விடுகின்றனர்.

ஏமாந்த ஐபி எஸ் அதிகாரி:
இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியிடம், வங்கி ஊழியர்கள் போல் செல்போனில் பேசி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காவல்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர் ஆசித் மோகன் பிரசாத். இவரது செல்போன் எண்ணுக்கு அடுத்தடுத்து தொடர்பு கொண்ட இரு மர்மநபர்கள், தங்கள் இரு ஏ.டி.எம். அட்டைகள் காலாவதியாகப் போவதாகக் கூறியுள்ளனர்.

ரூ. 2 லட்சம் அபேஸ்:
ஏ.டி.எம். அட்டைகளை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்று தகவல்களைக் கேட்டுள்ளனர். அதிகாரியும் தகவல்களைக் கொடுத்த நிலையில், மறுநிமிடம் இரு கணக்குகளில் இருந்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்த எஸ்.எம்.எஸை பார்த்து மோகன் பிரசாத் அதிர்ச்சியுற்றார். இதுதொடர்பாக அவர் இணைய குற்றத்தடுப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications