நாசா: விண்வெளி வீரர் பகிர்ந்த கலபகோஸ் தீவு.! வைரல்.! என்ன சிறப்பு?
இப்போது இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் மூலம் பல்வேறு வேலைகளை மிகவும் எளிமையாக செய்துவிடலாம், குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் நமக்கு பல்வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில்
சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் அதிகம் பகிரப்படுகிறது, அதைப் பற்றிய விரிவான தகல்களைப் பார்ப்போம்.

தற்போது வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுவது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட கலபகோஸ் தீவின் புகைப்படங்கள் ஆகும்.இதுதான் சமூக வலைதளங்களில் அதிமாக பகிரப்படுகிறது.

இது ஈக்குவடார் நாட்டில் இருந்து சுமார் 1000கி.மீ தூரத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய எரிமலைத் தீவுதான் கலபகோஸ் தீவுகள். இது வனவிலங்களைப் பார்ப்பதற்கான உலகின் முன்னணி இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் இதன் தனிமைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பு தாவர மற்றம் விலங்கு இனங்களின் பன்முகத்தன்மைக்கு உறுதுணையா இருக்கிறது. இந்த தீவைப் பற்றி கூறவேண்டும் என்றால், கடந்த 1835-ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் என்பவர் இந்த தீவைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

சார்லஸ் டார்வின பரிமாணக் கோட்பாடு தத்துவத்துக்கு கலபகோஸ் தீவு பற்றிய அவதானிப்புகள் அவருக்கும் பெரும் உதவியாக இருந்தன. மேலும் இந்த தீவுகளின் அரியவகை உயரினங்கள் பல வாழந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விண்வெளியில்
இருந்து எடுக்கப்பட்ட கலபகோஸ் தீவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது நாசா.

குறிப்பாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் விண்வெளி வீரர் கிரிஸ் காசிடி
என்பவர் தான் இந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ள பதிவு என்னவென்றால், கலபகோஸ் தீவுகளை இன்று கடந்து சென்ற அழாகன காட்சி என்று பதிவு செய்துள்ளார். மேலும் பல்வேறு மக்கள் எதோ மார்டன் ஆர்ட் போல காட்சியளிக்கும் விதமாக உள்ளது என கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கலபகோஸ் தீவின் நிலப்பரப்பை ஏரியல் வியூவில், அதுவும் விண்வெளியில் இருந்து பார்ப்பது என்பது சாதாரண காரியமா என்ன? என்று வியந்துபோன மக்கள் இந்த வாய்ப்பை தந்த கிரிஸ் காசிடிக்கு பாரட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications