இந்தியாவில் உள்ள அஸ்திரா ஏவுகனையின் சிறப்புகள் என்னென்ன?
இந்தியாவில் பாதுகாப்பு படைக்கு தேவையான ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரித்து கொடுக்கும் ஒரு அமைப்புதான் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம். குறிப்பாக இந்த அமைப்பின் மூலம் தயாரிக்கப்படும் புதிய ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பற்கள் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும்
விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது DRDO அமைப்பின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ள அஸ்திரா ஏவுகணையை இந்திய விமானப்படை மற்றும் கப்பல் படை கொள்முதல் செய்து கொள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் குழு அனுமதி வழங்கியுள்ளது.

முன்பு இந்தியாவிற்கு தேவையான அதிநவீன ஹெலிகாப்டர், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றை ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படும். இந்த நிலையில் உள்ளநாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 250அஸ்திரா ஏவுகணைகளை
வாங்கிகொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது விமானப்படை கப்பல்படை ஆகிய இரண்டுக்குமே கூடுதல் பலமாகும்.

இந்த அஸ்திரா ஏவுகனை பற்றி கூறவேண்டும் என்றால், குறைந்த மற்றும் தொலைதூர இலக்கு ஆகிய இரண்டையும் குறி வைத்துத் தாக்ககூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு குறைந்தபட்சம் 10கிலோ மீட்டரில் இருந்து அதிகபட்சம் 160கிலோ மீட்டர் வரை
பாய்ந்து இலக்கை தாக்கக்கூடிய என்று தகவல் வெளிவந்துள்ளத.

மேலும் அஸ்திரா ஏவுகளை 80கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு இலக்கை குறிவைத்து விட்டால் புயல், இடி மழை என எந்த கால மாற்றம் ஏற்பட்டாலும் இந்த ஏவுகனையை தடுக்க இயலாது. குறிப்பாக அஸ்திரா ஏவுகணை 154கிலோ எடை, 3.8நீளமும் கொண்டது.

குறிப்பாக சுகோய் 30, மிராஜ் 2000, மிக் 29 &21 ஆகிய போர் விமானங்களிலும் இந்திய கடற்படைக்கும் சொந்மான ஹேரியர்ஜெட் விமானங்களிலும் அஸ்திரா ஏவுகணையை பொருத்தி பயன்படுத்த முடியம். குறிப்பாக 15கிலோ வெடி பொருளைஎடுத்து செல்லக்கூடிய இந்த ஏவுகனை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 66ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் சக்தி
கொண்டது.

பின்பு புகை இல்லாமல் நீல வண்ணத்தில் நெருப்பைக் கக்கிக் கொண்டு சீறி பாயும் இந்த அஸ்திரா ஏவுகனை ஆனது அதிநவீனதொழில்நுட்பம் கொண்டது ஆகும்.


Click it and Unblock the Notifications