சரியான சமயத்தில் பெண்மணி உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.! நடந்தது இதுதான்.!
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதற்கு தகுந்தபடி இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதனங்களை தயார் செய்கிறது. ஆப்பிள் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய மென்பொருள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச்
ஆப்பிள் வாட்ச் மூலம் ஆபத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் ஏராளம் என்றே கூறலாம். பல்வேறு மக்களின் உயிரைகாப்பாற்றிய பெருமை கொண்ட ஆப்பிள் வாட்ச் சமீபத்தில் பெண்மணியின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

போன் அழைக்க முயன்றார்
அதன்படி கனடாவின் கல்கரி எனும் பகுதியை சேர்ச்த பெண் ஒருவர் தன்வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போதுவீட்டிற்குள் மர்ம் நபர் மறைந்திருப்பதை அவர் கண்டு மிகவும் பயந்து அதிர்ந்தார். வீட்டில் யாரும் இல்லாததை
உணர்த்தும், அவர் உதவிக்கு போன் அழைக்க முயன்றார்.

ஆப்பிள் வாட்ச்
ஆனால் அவர் அருகில் போன் இல்லாததால் அவரால் யாருக்கும் அழைப்பை மேற்கொள்ள இயலவில்லை. பின்பு அவர்அணிந்து இருந்த ஆப்பிள் வாட்ச் கொண்டு தான் ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவலை தனதுநண்பருக்குஉடனே தெரியப்படுத்தினார்.

காவல்துறைக்கு தகவல்
மேலும் அவருடைய நண்பர் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார். அதிரடியாக ஆபத்தில் சிக்கிய பெண்மனிவீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபரிடம் இருந்து அவரை மீட்டனர்.

ஜோசப் மிசின்டோ
குறிப்பாக வீட்டில் மறைந்து இருந்தவரின் பெயர் ஜோசப் மிசின்டோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு விசாரணையில்பெண்மணியை பாலியில் ரீதியில் அச்சுறுத்தும் நோக்கில் வீட்டிற்குள் நுழைந்ததாக ஒப்புக் கொண்டார்.

போலி சாவிகள்
ஜோசப் மிசின்டோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பையில் கத்தி, கயிறு,ஆணுறை மற்றும் பல்வேறு பொருட்கள்இருந்தன என்றும், பின்பு அந்த பெணிமியின் வீட்டு நுழைவு அட்டை, போலி சாவிகள் உள்ளிட்டவையும் இருந்ததாகவும்தகவல் கூறப்படுகிறது.

எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டார்
ஆப்பிள் வாட்ச் உதவியுடன் சரியான சமயத்தில் அந்த பெண்மனி எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டார். ஆப்பிள் நிறுவனம் மிகவும் பாதுகப்பான சாதனங்களை தயார்செய்வதற்கு அதிக கவனம் செலுத்திவருகிறது.


Click it and Unblock the Notifications