ஐபோன் 14 ப்ரோ: புதிய தொழில்நுட்பம் மூலம் ஏற்பட்ட சிக்கல்.! அப்படியென்ன சிக்கல்?
உலகம் முழுவதும் ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான அம்சங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை அறிமுகம் செய்கிறது. இதுதவிர சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது ஐபோன் மாடல்கள்.

ஐபோன் 14 ப்ரோ
அதேபோல் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் ஐபோன் 14 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இந்த புதிய ஐபோன் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக கிராஸ் டிடெக்க்ஷன் எனும் தரமான தொழில்நுட்ப வசதியைக் கொண்டு இந்த ஐபோன் 14 ப்ரோ அறிமுகமானது.

அவசர உதவி
குறிப்பாக ஐபோன் 14 ப்ரோ வைத்திருக்கும் பயனர்கள், காரில் சென்றுகொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டால், 911 என்ற அவசர உதவிக்கு தானாகவே வைஃபை மூலம், இவர் விபத்தில் சிக்கி உள்ளார் என்று தகவல் தெரிவிக்கும். குறிப்பாக பயனாளர் பேச முடியாத நிலையில் இருக்கும்போது, அவரால் பதிலளிக்க முடியவில்லை என்றால் தானியங்கி முறையில் தானே தகவலை அனுப்பிவிடும்.

சின்சினாட்டி
குறிப்பாக இதுபோன்ற தொழில்நுட்ப வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி என்ற இடத்தில் பூங்கா ஒன்றில் ரோலர் கோஸ்டரில் விளையாடிக்கொண்டிருந்த பெண்ணின் ஐபோன் அவர் ஆபத்தில் இருப்பதாகக் கருதி 911 என்ற அவசர உதவி எண்ணக்கு தகவலளித்தது.

ஐபோன் சென்சார்
அதாவது ரோலர் கோஸ்டரின் உயரம், வேகம், அதிர்வு போன்றை கார் விபத்தோடு ஒத்திருப்பதால் ஐபோன் தனது சென்சார் மூலம் இவர் ஆபத்தில் உள்ளதாக நினைத்து அவசர உதவிக்கு தகவல் கொடுக்க, அங்கு அவசர உதவி மீட்பு பணியினர் விரைந்தனர்.

அதன்பின்னர் மீட்பு பணியினர் வந்து விசாரித்ததில் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை எனத் தெரியவந்தது. குறிப்பாக இது ஐபோன் கொடுத்த தகவல் என்று தெரிந்துகொண்டனர்.

செய்தித் தொடர்பாளர்
மேலும் இதுகுறித்து ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியது என்னவென்றால், இத்தகைய நவீனத் தொழில்நுட்பம் மனிதர்களின் உயிர்களைக் காக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த தரமான தொழில்நுட்பம் மிகவும் அவசியமான ஒன்றுதான். ஆனால் இதில் சிறிய குறைகள் உள்ளன, விரைவில் இவை நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.

ஏரோபிளேன் மோட்
அதேபோல் ரோலர் கோஸ்டரில் இருக்கும்போது இதுபோன்ற சிக்கல் நேராமல் இருக்க ஏரோபிளேன் மோட் வசதியை பயன்படுத்தலாம் அல்லது போனை எடுத்துச் செல்வதை தவிர்த்து இருக்கலாம் என்று சிலர் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பாதுகாப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது தான் உண்மை.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications