ஆப்பிள் நிறுவனம் முதன் முதலில் வடிவமைத்த கணினி ஏலத்திற்கு வந்தது.!
ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் தனித்துவமான இயங்குதளம் மற்றும் தனித்துவமான சிப்செட் வசதியுடன்
வெளிவருவதால் அனைத்து நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஆப்பிள்-1 கணினி
குறிப்பாக ஸ்மார்ட்போன், கணினி, ஸ்மார்ட் வாட்ச் என பல சாதனங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த 1976-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனர்களான ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியாக் தங்கள் கைப்பட வடிவமைத்த முதல் ஆப்பிள்-1 கணினி இப்போது ஏலத்திற்கு வந்துள்ளது.

குறிப்பாக ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியாக் அப்போது 200 கணினிகளை உருவாக்கி விற்பனை செய்திருந்தனர். அதில் ஒன்று தான் இப்போது ஏலத்திற்கு வந்துள்ளது. அதாவது இது முழுமையான கணினியாக இல்லாமல் மதர் போர்ட், சிபியு, ரேம் மற்றும் டெக்ஷூவல் வீடியோ சிப்கள் போன்றவற்றை தான் ஆப்பிள் நிறுவனம் முதலில் விற்பனை செய்துள்ளது.

மேலும் கீபோர்ட், மானிட்டர் மாதரியானவை எல்லாம் வாங்கியவர்கள் அசெம்பிள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அப்படி அசெம்பிள் செய்யப்பட்ட ஒரு ஆப்பிள்-1 கணினியை கடந்த 1977-ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் Chaffey College பேராசிரியர் இடமிருந்து வாங்கி உள்ளார் அவரது மாணவர் ஒருவர். குறிப்பாக இந்த ஆப்பிள்-1 கணினியை அப்போது 650 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இப்போது அதை ஏலத்தில் விற்க முடிவு செய்துள்ளார் அந்த மாணவர். கண்டிப்பாக இந்த கணினி மாடலுக்கு 6 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை அவர் பெறுவார் எனத் தெரிகிறது. மேலும் இந்திய மதிப்பில் இந்த கணினியின் விலை 4.4 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அதேபோல் இப்போது இயங்கும் அந்த கணினி, பானாசோனிக் வீடியோ மானிட்டர் உடன் ஏலத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எஸ்இ 3
மேலும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் எஸ்இ 3 சாதனத்தை வரும் 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்மிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சற்று குறைவான விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. வெளிவந்த தவலின் அடிப்படையில், ஆப்பிளின் ஐபோனின் SE 3 ஆனது LCD டிஸ்ப்ளே பேனலைக் கொண்டிருக்கும் என்று
கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கேமராவைப் பொறுத்தவரை, இந்த புதிய ஐபோன் எஸ்இ 3 சாதனம் ஒற்றை பின்புற கேமராவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது iOS 15 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் GPS மற்றும் Wi-Fi ஆகியவை அடங்கும். சென்சார்கள் பற்றிப் பார்க்கையில், இந்த போனில் கைரேகை சென்சார் இருக்கலாம். மேலும் இது 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications