புதிய மேக்புக் ப்ரோஸ் அறிமுகம்: ஆப்பிளின் புதிய திட்டம்

By Super
|
புதிய மேக்புக் ப்ரோஸ் அறிமுகம்: ஆப்பிளின் புதிய திட்டம்

வருகிற ஜூன் 11-ஆம் தேதி ஆப்பிள் டெவலப்பர்களின் சர்வதேச மாநாடு நடை பெற இருக்கிறது. இந்த மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மேக்புக் ப்ரோஸ் லேப்டாப்பினை அறிமுகம் செய்வதாக திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஐவி பிரிட்ஜ் இன்டெல் பிராசஸரை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த பிராசஸர் கொண்ட புதிய எலக்ட்ரானிக் சாதனம் எப்போது வெளி வரும் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்ககப்பட்டு வந்தது. அந்த வகையில் ஐவி பிரிட்ஜ் பிராசஸர் கொண்ட லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது ஆப்பிள்.

இந்த லேப்டாப்பின் வடிவமைப்பு நிச்சம் அனைவரையும் பிரம்மித்து போக செய்யும் என்று தாராளமாக கூறலாம். மேக்புக் ப்ரோஸ் லேப்டாப் 15 இஞ்ச் பிரம்மாண்ட திரையில் அசத்தும். மாத இதழ்களை போல மெல்லிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த லேப்டாப்.

ஏற்கனவே இன்டெல் பிராசஸர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப், நிச்சயம் இன்னும் அதிக தொழில் நுட்ப வசதிகளை வழங்குவதாக இருக்கும்.

ஆப்பிள் டெவலப்பர்களின் சர்வதேச மாநாட்டில் அறிமுகம் செய்வதாக திட்டமிடப்பட்டிருக்கும் இந்த அல்ட்ரா மேக்புக் ப்ரோஸ் லேப்டாப் பற்றிய அதிக தகவல்கள் இனி தான் வெளியாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X