உலக வரலாற்றில் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம்..!!
உலகின் மிகப்பெரிய தொழில்நுட் நிறுவனமும் மொபைல் சந்தையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் தான் ஆப்பிள். வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு சிறிதும் குறை வைக்காமல் அந்நிறுவனத்தின் புதிய கருவிகள் உலகம் முழுக்க வெளியானது.
இதே பரபரப்போடு இந்தியாவிலும் புதிய ஐபோன் கருவிகள் வெளியானது அனைவரும் அறிந்த ஒன்றே, எனினும் இவைகளின் விற்பனை எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபோன்
இந்தியாவில் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு அந்நிறுவனம் அக்டோபர் 16 ஆம் தேதி ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் என இரு கருவிகளை வெளியிட்டது.

விலை
முந்தைய கருவிகளை விட அதிக சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதால் விலையும் அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஏமாற்றம்
இந்தியா போன்ற பட்ஜெட் சந்தையில் அந்நிறுவனம் அதிக விலைக்கு கருவிகளை வெளியிட்டதே மந்தமான விற்பனைக்கு காரணமாக கூறப்படுகின்றது.

விலை குறைப்பு
இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் புதிய கருவிகளின் விலையை இந்தியாவில் மட்டும் குறைக்க திட்டமிட்டுள்ளது.

முதல் முறை
கருவிகளை வெளியிட்டு ஒரே மாதத்தில் புதிய ஐபோன்களின் விலை குறைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

விலை
இதையடுத்து புதிய ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகளுக்கு சுமார் ரூ.34,000 வரை தள்ளுபடி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கின்றது.

பைபேக்
இதன் படி புதிய ஐபோன் கருவிகளை வாங்குபவர்கள் ரூ.34,000 வரை பைபேக் சலுகை வழங்கப்படுவதாக இணையங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications