இனிமே எல்லாம் இப்படித்தான், ஆப்பிள் புதிய முடிவு.!!
இன்று நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும், பிளாஸ்டிக் அல்லது மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இல்லாமல் ஸ்மார்ட்போன்கள் முழுமையாக கண்ணாடி மூலம் வடிவமைக்கப்பட இருக்கின்றது. அதன் படி ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால கருவிகள் கண்ணாடி மூலம் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

வியப்பு
மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் கண்ணாடி மூலம் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை வெளியிட இருப்பதாக பிரபல ஐபோன் ஆய்வாளர் மிங்-சி-கு தெரிவித்துள்ளார்.

அலுமினியம்
இதுவரை அலுமினியம் கொண்டு தாயரிக்கப்பட்டு வந்த ஐபோன்களில் முற்றிலும் கண்ணாடி மூலம் தயாரித்து, ஏஎம்ஒஎல்இடி திரை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

ஐபோன் 8
கண்ணாடி கொண்டு தயாரிக்கப்பட இருக்கும் ஆப்பிள் கருவியானது ஐபோன் 8 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

பயன்பாடு
தற்சமயம் 100 சதவீதம் ஸ்மார்ட்போன்கள் அலுமினியம் கொண்டு தயாரிக்கப்படும் நிலையில் 2017 ஆம் இந்த எண்ணிக்கை சுமார் 40 சதவீதம் வரை குறையும் என்றும் மிங்-சி-கு தெரிவித்துள்ளார்.

ஐபேட்
இதோடு ஐபோன், ஐபேட் உள்ளிட்ட ஆப்பிள் கருவிகளும் கண்ணாடி மூலம் வடிவமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.
வீடியோ
ஆப்பிள் ஐபோன் கான்செப்ட் வீடியோ

மேலும் படிக்க
பாத்ரூம்ல மொபைல் யூஸ் : காத்திருக்கும் கண்டங்களும் தப்பிக்க வழியும்..!
என்ன செய்தாலும் வேலை செய்யும் ஐபோன் எஸ்இ.!!

முகநூல்
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications