ஆப்பிள் புதிய போன் : ஐபோன் 6எஸ் ரோஸ் கோல்டு, நம்பலாமா..?
மக்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் யூகங்களுக்கு கூகுள் நிறுவனம் முற்று புள்ளி வைத்திருப்பதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மௌனம் காத்து வருவதே இது போன்ற செய்திகளுக்கு வழி வகுக்கின்றது.
ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ என்ன எதிர்பார்க்கலாம்..?
காலம் காலமாக இந்நிறுவனத்தின் போக்கு இது தான் என்றாலும் மக்களும் இந்நிறுவனத்தை விடுவதாக இல்லை என்றும் கூறலாம். ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவி குறித்து சில தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..
யூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..?

ஐபோன்
இம்முறை செய்திகளில் அதிகம் பேசப்படும் கருவியாக ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் இருப்பதோடு இந்த கருவி இந்த ஆண்டே வெளியாகும் என்றும் நம்பப்படுகின்றது.

ரோஸ் கோல்டு
தற்சமயம் ஸ்மார்ட்போன் உலகை உற்று நோக்க வைத்திருக்கும் கருவி ரோஸ் கோல்டு நிறத்தில் இருப்பதோடு, இந்த கருவி சீன நாட்டின் சமூக வலைதளங்களை தாண்டி இந்தியா வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ஸ் டச்
புதிய கருவியில் ஆப்பிள் நிறுவனம் கட்டாயம் ஃபோர்ஸ் டச் தொழில்நுட்பத்தை வழங்கலாம் என நம்ப்படுகின்றது.

தட்டை
ஃபோர்ஸ் டச் தொழில்நுட்பம் வழங்கப்பட்டால் தற்சமயம் இருப்பதை விட புதிய கருவியானது நிச்சயம் தட்டையாக இருக்கும்.

பிராசஸர்
ஐபோன் 6எஸ் தான் அடுத்த கருவியாக இருக்கும் என்ற நிலையில் இந்த கருவி ஆப்பிள் ஏ9 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

கேமரா
அடுத்த தலைமுறை ஆப்பிள் கருவியில் 12 எம்பி ப்ரைமரி கேமரா எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறம்
ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் ரோஸ் கோல்டு நிறம் மட்டுமல்லாமல் மற்ற நிறங்களிலும் வழங்கப்படலாம்.

ஆப்பிள் வாட்ச்
இதோடு ஆப்பிள் நிறுவனம் ரோஸ் கோல்டு நிறத்தில் புதிய ஆப்பிள் வாட்ச் கருவியை வெளியிடும் என்றும் கூறப்படுகின்றது.

உண்மை
தற்சமயம் வரை ஆப்பிள் நிறுவனத்தின் மொனம் வெளியாகி இருக்கும் தகவல்கள் குறித்து எவ்வித உறுதியும் அளிக்கவில்லை என்பதால், இவைகளில் மாற்றங்கள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

முகநூல்
இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications