ஆப்பிள் தனியாக ஒரு ஏஐ அம்சத்தை உருவாக்குகிறதா? மற்ற ஏஐ-க்கு ஆப்பு ரெடியா? என்ன நடக்கிறது?
உலகளவில் இப்போது மக்கள் மெல்ல-மெல்ல ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence) என்ற ஏஐ (AI) சேவையை பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஒருபுறம் ஓபன் ஏஐ இன் அட்டகாசம் தாங்க முடியவில்லை. மறுபுறம் எக்ஸ் ஏஐ இன் செயல்பாடு தலை ஓங்க துவங்கியுள்ளது.
ஓபன் ஏஐ சேவையைவிட மிகவும் சிறப்பான சேவையை வழங்க எக்ஸ் ஏஐ (X-AI) என்ற புதிய மற்றும் பாதுகாப்பான ஏஐ சேவையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் உருவாக்கியுள்ளார். இவர்களை போலவே கூகுள் நிறுவனமும் கூட பார்ட் என்ற ஏஐ சேவை அறிமுகம் செய்து பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து, இந்த வரிசையில் புதிதாக ஆப்பிள் நிறுவனமும் அதன் ஏஐ சேவையை விரைவாக துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் எந்தவொரு வெளிப்படையான அறிவுப்பு எதுவும் இல்லாமல், சைலெண்டாக அதன் சொந்த ஏஐ தளத்தை வேகமாக உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய ஆப்பிள் ஏஐ சேவை பற்றி என்ன தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பார்க்கலாம் வாங்க.
உலகளவில் செயற்கை நுண்ணறிவு அல்லது ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்ற ஏஐ (Ai) தொழில்நுட்பங்கள் வேகமாக பரவி வருகின்றன. இப்போதைக்கு, OpenAI ஆனது ChatGPT உடன் பந்தயத்தில் முன்னிலை வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் பையின் ஒரு பகுதியைப் பெற வேலை செய்கின்றன.
இதற்கு மத்தியில், ஆப்பிள் நிறுவனம் மெதுவாக நத்தை போல சத்தமில்லாமல் நகர்கிறது. தனக்கான சொந்த AI தளத்தை உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் இப்போது சில முன்னேற்றங்களைச் செய்வதாக தெரிகிறது. ஆனால் இது முற்றிலும் உண்மையாக இருக்காது என்று சமீபத்திய தகவல்கள் தெரிவித்திருந்தன. ஆனால், தற்போதைய புதிய தகவல், இது முற்றிலும் உண்மையாக இருக்கலாம் என்று கூறி சில ஆதாரங்களை லீக் செய்துள்ளன.
ஆப்பிள் உருவாக்கும் AI சேவையை விரைவாக அறிமுகம் செய்ய உலகளவில் கைதேர்ந்த திறமைசாலிகளை நிறுவனம் தேடுகிறது என்று கூறப்படுகிறது. காரணம், நிறுவனம் AI தொடர்பான துறைகளில் உள்ளவர்களை தனது நிறுவனத்தின் ஒரு தனிப்பிரிவில் வேகமாக சேர்த்து வருகிறது. ஒரு நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களை அறிவது நிச்சயமாக சாத்தியமற்றது.
ஆனால், சில துப்புகளை நோக்கி நாம் கவனம் செலுத்தினால், நீங்கள் ஒரு தெளிவான யோசனையைப் பெற முடியும். ஆப்பிளைப் பொறுத்தவரை, இந்த தடயங்கள் வேலை விளம்பரங்களில் இருந்து வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனமான ஜெனரேட்டிவ் AI துறையில் பல புதிய வேலை விளம்பரங்களை சமீபத்தில் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு இப்படி எந்தவொரு செயலையும் நிறுவனம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வேலை வாய்ப்புகள் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், ஐரோப்பா மற்றும் ஆசியாவிலும் வேலை ஆட்களை தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வேலை விளம்பரத்தில், "அப்ளைடு எம்எல் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவைக் கொண்ட ஒரு வேட்பாளரை நாங்கள் தேடுகிறோம்.
பெரிய அளவிலான மொழி மற்றும் பன்முக மாதிரிகளை விநியோகிக்கப்பட்ட பின்தளங்களில் பயிற்சி செய்தல், டிரான்ஸ்பார்மர்கள் போன்ற கச்சிதமான நியூரல் கட்டமைப்புகளை சாதனத்தில் திறம்பட பயன்படுத்துதல் மற்றும் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் பயனருக்குத் தனிப்பயனாக்கக்கூடிய கற்றல் கொள்கைகள் ஆகியவை அடங்கும்" என்று விளம்பரம் செய்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிறுவனத்தின் திட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், சில கூற்றுக்கள் சிரியை ஸ்மார்ட்டாகவும் மேலும் செயல்பாட்டுடனும் செய்ய ஆப்பிள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று கூறுகின்றன. ஆம், ஏற்கனவே சந்தையில் பல AI சாட்போட்கள் உள்ளன.
ஆனால், அவற்றில் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சங்கள் எதுவும் இல்லை. நிறுவனம் அதன் போட்டியாளர்களுக்கு முன்பாக இந்த தொழில்நுட்பத்தை தயார் செய்ய முடிந்தால், அதன் ஏற்கனவே உயர்ந்த வாய்ஸ் அசிஸ்டன்ட் அனுபவத்தை முற்றிலும் புதிய நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








