வெளிநாட்டில் வாங்கிய ஐபோன்களுக்கு இந்தியாவில் வாரண்டி சப்போர்ட்.!
ஆப்பிள் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் வாங்கிய அன்லாக் செய்யப்பட்ட ஐபோன்களுக்கு வாரண்டி மூலம் சரிசெய்து கொள்ள முடியும்.
உலகநாடுகளில் ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது, மேலும் ஐபோனகள்; விலை மட்டும் எப்போதுமே சற்று விலை அதிகம், பொதுவாக ஐபோன் மாடல்கள் பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்களை கொண்டு வெளிவரும்.
ஆப்பிள் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் வாங்கிய அன்லாக் செய்யப்பட்ட ஐபோன்களுக்கு வாரண்டி மூலம் சரிசெய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வீஸ் மையங்கங்கள்:
வாடிக்கையாளர்கள் பொதுவாக வெளிநாடுகளில் வாங்கிய ஐபோன்களுக்கு அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் சரி செய்யப்படாத சூழல் இருந்தது, இப்போது கொண்டு வந்துள்ள இந்த புதிய திட்டம் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

ஆப்பிள்:
ஆப்பிள் சாதனங்கள் பொறுத்தவரை எப்போதுமே புதிய தொழில்நுட்பம் மற்றும் பல சிறப்பம்சங்கள் கொண்டு வெளிவரும், எனவே அதிக மக்கள் ஆப்பிள் சாதனங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அமெரிக்கா:
அமெரிக்கா போன்ற நாடுகளில் ஐபோன் வாங்கியிருந்தால் இப்போது ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் சரி செய்யமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ்:
இந்தியாவில் விரைவில் ஐபோன் எக்ஸ் முதற்கட்டமாக விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஐபோன் எக்ஸ்
முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது, இந்த சாதனத்தின் விற்பனை நவம்பர் 3-ம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ் விலை:
ஆப்பிள் எக்ஸ் மாடலின் இந்திய விலை மதிப்பு 65,000-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஐபோன் மாடல் அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது.

ஆப்பிள் சாதனங்கள்:
இதற்க்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் ஐபாட், ஐபேட், ரவுட்டர்கள், மேக் கம்ப்யூட்டர்கள் போன்ற சாதனங்களுக்கு மட்டுமே வாரண்டி வழங்கப்பட்டுவந்தது, இப்போது அந்தவரிசையில் ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு வாரண்டி மூலம் சரிசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications