Home
News

இனிமேல் இப்படி செய்யக் கூடாது: ஊழியர்களை எச்சரித்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்.!

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டு வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். சமீபத்தில் இந்நிறுவனம் புதிய ஐபோன்கள், ஐபேட், ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆப்பிள்

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் ஊடகங்களுக்கு கசிவது ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் , ஊழியர்களுக்கு கடுமையான ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.

ஊழியர்களுக்கு அனுப்பிய

டிம் குக் அவர்கள் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஊடகங்களுக்கு தகவல்களை கசிய விடும் ஊழியர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெர்ஜ் எனும் ஊடகம்,நிறுவனத்தின் சுற்றறிக்கை ஒன்றை பொதுவெளியில் அப்படியே வெளியிட்டதாக கூறப்படுகிறது.

லந்துரையாடல்கள் வெளியே

மேலும் இதற்கு முன்பும் அலுவலகத்தினுள் நடைபெறும் கலந்துரையாடல்கள் வெளியே கசியவிடப்பட்டுள்ளன. அதாவது தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நாள், அலுவலக மீட்டிங்குகள் என பல தகவல்கள் வெளியே கசிவதை தொடர்ந்து தான் டிம் குக் இவ்வாறு எச்சரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரப்பூர்வமாக வெளியிடும் முன்பு வெளியே கசிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நிறுவனத்தின் ரகசிய தகவல்களை கசியவிடுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார் டிம் குக். அதேபோல் ஐபோன் 13 குறித்த தகவல்கள், அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பு வெளியே கசிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஐபோட் மாடலின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

ட் மாடல் ஏ13 பிராசஸர் வசதியுட

புதிய ஐபேட் மாடல் ஏ13 பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஐபேட் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடல்களை விட வேகமாக செயல்படக்கூடியது என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

ஐபேட் மாடல் ஆனது தினசரி

புதிய ஐபேட் மாடல் ஆனது தினசரி பயன்பாடுகளுக்கு தகுந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் முன்பைவிட அதிவேகமாகவும், சிறப்பாக செயல்படுத்தும் திறன் கொண்டுள்ளது இந்த புதிய ஐபேட் மாடல் மேலும் இந்த புதிய ஐபேட் மாடலில் 12எம்பி அல்ட்ரா வைடு செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு இந்த செல்பீகேமரா ஆனது வீடியோகால் மேற்கொள்ளும் போது பல்வேறு புதிய வசதிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஐபேட் மாடல் ஆனது சமீபத்திய ட்ரூடோன் அம்சத்தைக் கொண்டுவருகிறது. அதேபோல் இதன் செல்பீ கேமரா சென்டர் ஸ்டேஜ் அம்சத்தை கொண்டுள்ளதால் வீடியோகால் அழைப்புகளுக்கு மிகவும் அருமையாகவே இருக்கும் என்று கூறலாம். குறிப்பாக புதிய ஐபேட் மாடல் ஆனது 10.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஐபேட் மூன்றாம்
தரப்பு கீபோர்டுகள் மற்றும் இது முதல் தலைமுறை ஆப்பிள் பென்சில் சப்போட் ஆதரவைக் கொண்டுள்ளது.
மேலும் இதன் பேஸ் மாடலின் (64ஜிபி) விலை 329 டாலர்கள் எனத் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News Source: ndtv.com

Best Mobiles in India

English summary
Apple CEO Tim Cook warns employees against leaking confidential information: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X