Just In
- 6 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 8 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 8 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 8 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
"மக்களை வைத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தால்" : பேஸ்புக்கை கிழித்த டிம் குக்!
"நான் இம்மாதிரியான சூழ்நிலையை உருவாக்கவே மாட்டேன்" என்று அவர் பதிலளித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், பேஸ்புக் நிறுவனத்தின் "பாதுகாப்பு ஓட்டைகளை", அதாவது ப்ரைவஸி பாலிஸிகள் எனப்படும் தனியுரிமை கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதெல்லாம் (தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மூலம் நிகழ்த்தப்படும் ப்ரைவஸி கட்டுப்பாடுகள்) நீண்ட காலத்திற்கு முன்னரே நிகழ்த்தப்பட்டு இருக்க வேண்டும், இப்போது கால கடந்து விட்டது" என்றும் டிம் குக், பேஸ்புக்கை சாடியுள்ளார்.
அமெரிக்காவில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டிம் குக், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் தான் எல்லா தவறுகளையும் செய்துள்ளார்.!
பேட்டியின் போது, "ஒருவேளை பேஸ்புக்கின் சிஇஓ ஆன மார்க் ஜுக்கர்பெர்க் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்.?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு "நான் இம்மாதிரியான சூழ்நிலையை உருவாக்கவே மாட்டேன்" என்று பதிலளித்துள்ளார். அதாவது மார்க் ஜுக்கர்பெர்க் தான் எல்லா தவறுகளையும் செய்துள்ளார் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
கடுமையாக விமர்சித்துள்ளார்.!
ரீகோட் மற்றும் எம்எஸ்என்பிசி உடன் நிகழந்த இந்த பேட்டியானது, வருகிற ஏப்ரல் 6 அன்று ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேட்டியில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் அனைத்து நிறுவனங்களையும், டிம் குக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எங்களாலும் பல கோடிகளை சம்பாதிக்க முடியும்..!
"என்னை பொறுத்தவரை எந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதே ஒரு சிறந்த கட்டுப்பாடு - அது சுய கட்டுப்பாடாகும். எனினும், நாம் அதற்கெல்லாம் அப்பால் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்" என்று கூறியதோடு நில்லாமல், "நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை வைத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தால், பல கோடிகளை சம்பாதிக்க முடியும். ஆனால் நாங்கள் அதை தேர்ந்தெடுக்கவில்லை." என்றும் டிம் குக் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா.!
பயனர்களின் பேஸ்புக் டேட்டாவானது தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரங்கள், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா வழியாக வெளியான நாளில் இருந்து, அதிகாரபூர்வமான விசாரணை உட்பட பல சிக்கல்களையும், விமர்சங்களையும் பேஸ்புக் நிறுவனம் சந்தித்து வருகிறது. இந்நிலைப்பாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ ஆன டிம் குக்கின், இந்த விமர்சனம் பேஸ்புக்கை இன்னும் பின்னடைய செய்யும் என்பது வெளிப்படை.
பங்களிப்பை ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க்.!
சுமார் 50 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அது கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி அடைவதற்கான வழிமுறைகளை தொகுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில், பேஸ்புக் நிறுவனத்தின் பங்களிப்பை ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ பக்கத்தை அகற்றியுள்ளன.!
இதற்கிடையில், எலோன் மஸ்க் (ஸ்பேஸ்எக்ஸ்), நகைச்சுவை நடிகர் ஜிம் கேரி, பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் (மற்றும் சமீபத்தில் பிளேபாய் நிறுவனம்) ஆகியோர்கள், பேஸ்புக்கில் இருந்து அவர்களது அதிகாரப்பூர்வ பக்கத்தை அகற்றியுள்ளனர் என்பதும், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் விபரங்களையும் பதிவு செய்வதற்காக, பேஸ்புக் நிறுவனத்தின் மீது மூன்று பயனர்கள் வழக்கும் தொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470