Home
News

இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான Android போன்களுக்கு ஆபத்து.. அரசாங்கம் வெளியிட்ட நேரடி எச்சரிக்கை..

இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android smartphone) பயனர்களுக்கு மிகவும் மோசமான பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு சிக்கல் தொடர்பான ஆபத்து நிகழ்ந்துள்ளதாக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) புதிய எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல மில்லியன் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு மிகவும் மோசமான மற்றும் மிகவும் தீவிரமான பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கோரி , நேரடியாக இந்திய அரசாங்கத்திடமிருந்தே புதிய எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது ஒரு மோசமான குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7, 2024 தேதி வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை செய்தியின் அடிப்படையில், இப்போது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 12, 12L, 13 மற்றும் 14 இல் இயங்கும் அணைத்து ஸ்மார்ட்போன் சாதனங்களும் இந்த பாதுகாப்பு சிக்கலை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான Android போன்களுக்கு ஆபத்து..

மில்லியன் கணக்கான Android போன்களுக்கு ஆபத்து.. அரசாங்கம் வெளியிட்ட நேரடி எச்சரிக்கை:

இந்த புதிய பாதுகாப்பு சிக்கல் மிகவும் தீவிரமான குறைபாடுகள் பிரிவின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களின் முக்கியமான தகவல்களை மூன்றாம் நபர் அணுகவும், அல்லது மோசடிக்காரர்கள் அல்லது ஹேக்கர்கள் அணுகுவதற்கு வழி தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் தன்னிச்சையான குறியீட்டை இயக்கவும் இது அனுமதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஸ்மார்ட்போன் பயனர்கள் தற்போது எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய சிக்கல் காரணமாக பல கோளாறுகள் எழக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஃபிரேம்வொர்க் (framework), சிஸ்டம் (system), கர்னல் (kernel), ஆர்ம் காம்போனென்ட்ஸ் (ARM components), இமேஜினேஷன் டெக்னாலஜீஸ் (Imagination technologies), மீடியாடெக் கூறுகள் (MediaTek components), குவால்காம் காம்போனென்ட்ஸ் (Qualcomm components) போன்ற பல்வேறு கூறுகளில் உள்ள சிக்கல்களால் பாதிப்புகள் உருவாகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்ட்ராய்டு பதிப்புகளின் பரவலான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, மில்லியன் கணக்கான சாதனங்கள் ஆபத்தில் உள்ளன என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சாம்சங் (Samsung), ரியல்மி (Realme), ஒன்பிளஸ் (OnePlus), சியோமி (Xiaomi) மற்றும் விவோ (Vivo) போன்ற பிராண்டுகள் குறிப்பிடப்பட்ட சிப் தயாரிப்பாளர்களை நம்பியிருப்பதால் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளை நிவர்த்தி செய்ய இந்த நிறுவனங்கள் பாதுகாப்பு இணைப்புகளை அவசரமாக வெளியிட வேண்டும்.

இதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பிராண்டுகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த சில வாரங்களில் புது அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 6 தொடரிலிருந்து தொடங்கும் பிக்சல் சாதனங்களுக்கான Google இன் சமீபத்திய ஆகஸ்ட் மென்பொருள் அப்டேட் இந்த எச்சரிக்கை பின்பற்றுகிறது. இந்த புதிய அப்டேட், Google இன் பாதுகாப்பு அச்சுறுத்தல் குழுவால் தீவிரமானதாகக் கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் புதிய அப்டேட்டை டவுன்லோட் செய்வதன் மூலம், இந்த மோசமான பாதுகாப்பு சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் ஒவ்வொரு பிராண்டட் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கும் எப்போது வெளியாகும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஏதேனும் புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்யும் படி, உங்கள் போன் நோட்டிபிகேஷன் காண்பித்தால், யோசிக்காமல் உடனே அதை அப்டேட் செய்யுங்கள .

More from GizBot

Best Mobiles in India

English summary
Android Mobile Phones Are In Danger Of Security Theft and Compromised Alert From CERT-In
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X