புதிய கடை துவங்கும் ஆண்ட்ராய்டு இணை நிறுவனர்..!!
உலக ஸ்மார்ட்போன் சந்தையை ஆட்டிப்படைக்கும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் இணை நிறுவனரான ஆன்டி ரூபின் சொந்தமாக ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்றை துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து திஇன்ஃபர்மேஷன் எனும் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் செய்தி குறிப்பில் ஆன்டி ரூபின் தனது புதிய நிறுவனத்தில் பணியாற்ற ஆட்களை தேர்வு செய்ய திட்டமிட்டு வருவதாக கூறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவர் சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை துவங்க இருப்பதாகவே நம்பப்படுகின்றது.

ஆண்ட்ராய்டு நிறுவனத்தை கூகுள் கைப்பற்றிய பின் சில ஆண்டுகள் கூகுள் தரப்பில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கவனித்து வந்தார். பின் கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறியதோடு ப்ளேகிரவுன்டு ஃபன்டு எனும் ஸ்டார்ட்அப் திட்டங்களுக்கு நிதி திரட்டும் நிறுவனத்தை துவங்கினார்.

ப்ளேகிரவுன்டு நிறுவனம் இது வரை சுமார் $300 மில்லியன் வரை நிதி திரட்டியிருக்கின்றது குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் வீடுகள் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்திருக்கும் ஆன்டி ரூபின் ஆண்ட்ராய்டு மூலம்ம் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதை உணர்ந்திருப்பதாக திவெர்ஜ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications