Just In
- 16 min ago
இந்த பட்ஜெட்ல இப்படி ஒரு 50-inch 4K TV-ஆ! வாய் பிளக்க வைக்கும் OnePlus!
- 1 hr ago
FASTAG-இல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணம் திருடுவதாக வெளியான வீடியோ- உண்மை என்ன?
- 2 hrs ago
என்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEO
- 2 hrs ago
தினமும் Fast Charging செய்வதன் பின்னணியில் உள்ள பேராபத்து! இதுல 240W வேற?
Don't Miss
- Finance
கொரோனாவுக்கும் தங்கம்.. கல்விக்கும் தங்கம்..!
- Movies
25வது நாளை வெற்றிகரமாக எட்டிய கமலின் விக்ரம்.. சென்னையில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
- News
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மாணவர்கள் தேர்ச்சி விகிதம்.. காரணம் இதுதான்
- Automobiles
எங்கயோ மச்சம் இருக்கு... கணவருக்காக சர்ச்சை நடிகை செய்த காரியம்... நமக்கு இப்படி எல்லாம் நடக்க மாட்டேங்குதே!
- Lifestyle
மேஷம் செல்லும் செவ்வாயால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
- Sports
ருத்துராஜுக்கு தண்டனை கொடுத்தாரா ஹர்திக்.. திரும்பவும் அந்த சிக்கல் வந்தது.. உண்மையில் நடந்தது என்ன
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!
இந்திய தொழிலதிபர்களில் பிரதான ஒருவர் ஆனந்த் மஹிந்திரா. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆவார் இவர். இவர் சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதோடு துடிப்பான இளைஞர்கள், திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பை வழங்குவதிலும் இவர் வல்லவர் ஆவார். இவரது சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 8.9 மில்லின் ஆகும். இவர் சமூகவலைதளங்களில் தன்னை கவர்ந்த விஷயங்களில் பகிர்வதை எப்போதும் தவறமாட்டார். அதன்படி தற்போது வாழ்க்கையின் தத்துவம் குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பிரபலமான யின் யாங் புகைப்படம்
அது சீனாவின் பிரபலமான யின் யாங் புகைப்படமாகும். இரண்டு எதிர் எதிர் விஷயங்களை இணைக்கும் இந்த புகைப்படம் சீனாவில் தாவோயிசம் பரவிய காலத்தில் புகழ் பெற்ற தத்துவம் ஆகும். இதில் ஒரு வட்டத்தில் சுழல்வது போன்ற சரிபாதி கருப்பு (யின்) வெள்ளை (யாங்) வண்ணம் ஆகும். இதன் கருப்புப் பாதியில் வெள்ளை புள்ளியும், வெள்ளைப் பாதியில் கருப்புப் புள்ளியும் இடம்பெற்றிருக்கிறது. இது யின் யாங் சின்னம் என அழைக்கப்படுகிறது. இந்த புகைப்படத்தை தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.
|
ஆனந்த் மஹிந்திராவின் சமூகவலைதள பதிவு
பொதுவாக ஆனந்த் மஹிந்திராவின் சமூகவலைதள பதிவு வைரலாவது இயல்பு. அதேபோல் அவர் பகிர்ந்த இந்த வாழ்க்கைத் தத்துவ புகைப்படம் பெரிதளவு வைரலாகிறது. ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட இந்த டுவிட்டர் பதிவில், வாரத்தில் பாதி நிறைவடைந்திருக்கும் இந்த சமயத்தில் இந்த பாதி குறித்த கதையை அறிவதற்கு நல்ல வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.
|
புகைப்படத்தின் விளக்கம்
இதனுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் முதல் பாதியில் முழு வட்டத்தில் கருப்பு வண்ணம் இருக்கிறது. இது கெட்டது என்பது குறிக்கிறது. அடுத்த வட்டம் வெள்ளையாக இருக்கிறது அது நன்மை என்பதை குறிக்கிறது. பின் அந்த வட்டத்தில் இந்த சரிபாதி இருக்கிறது. அதில் வெள்ளை நிறத்தில் ஒரு கருப்புப் புள்ளி இருக்கிறது. அது நல்லதில் உள்ள கெட்டதை காட்டுகிறது. அதேபோல் கருப்பு நிறத்தில் ஒரு வெள்ளைப் புள்ளி இது கெட்டதில் உள்ள நல்லதை குறிக்கிறது. இறுதியாக முழு வட்டத்தோடு கூடிய புகைப்படம் காண்பிக்கப்பட்டு இதுதான் வாழ்க்கை என காண்பிக்கப்படுகிறது. ஆனந்த் மஹிந்திராவின் இந்த கருத்தை நெட்டிசன்கள் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இது வாழ்க்கையின் சரியான விளக்கம் எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் பல ஈர்ப்பு கருத்துகள்
சமூகவலைதளங்களில் பல ஈர்ப்பு கருத்துகளை பதிவிடுவதில் ஆனந்த் மஹிந்திரா வல்லவர். வாகனங்களில் இன்னும் புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டுவிட் செய்திருந்தார். அதாவது சென்னையில் உள்ள ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை என்பவர் தனது ஆட்டோவில் இலவச வைஃபை வசதி, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப் என பயணிகளை கவர பல வசதிகளை வைத்துள்ளார்.
|
ஆட்டோவுக்கு உள்ளேயே பல சாதனங்கள்
இதுதவிர ஆட்டோவுக்கு உள்ளேயே சிறிய குளர்சாதனப்பெட்டி, சாக்லேட் போன்றவற்றையும் வைத்துள்ளார். அதேபோல் பணம் செலுத்த ஸ்வைப்பிங் மிஷன் வசதியும் வைத்துள்ளார். குறிப்பாக அண்ணாத்துரையின் ஆட்டோவில் செல்லவேண்டும் என சில வாடிக்கையாளர்கள் காத்திருந்து செல்கின்றனர். அந்தஅளவுக்கு தனது ஆட்டோவில் பயணிக்கும் வாடிக்கையாளர்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்கிறார்.

வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
12-வது வரை மட்டுமே படித்திருக்கும் அண்ணாதுரை,வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து கூகுள், ஹெச்பி போன்ற முன்னணி நிறுவனங்களிடம் இருந்து பேச அழைப்பு வந்துகொண்டுள்ளது. மேலும் சமீபத்தில் The Better India, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையிடம் இதுதொடர்பாக நேர்காணல் மேற்கொண்டுள்ளது. இதை பார்த்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா MBA படிக்கும் மாணவர்கள் இவருடன் ஒரு நாள் இருந்தால் போதும், வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். இவர் வெறும் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல, பேராசிரியர் என்று புகழாரம் தெரிவித்தார்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999