Just In
- 5 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 6 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 6 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 6 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை: அமேசான் லஞ்ச விவகாரம்- என்ன நடந்தது., எவ்வளவு தொகை?
அமேசான் இந்தியா அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து அதன் சட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் வழக்கறிஞர்கள், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அரசு ஊழலை எந்த விதித்திலும் சகித்துக் கொள்ளாது எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.
விசாரணை நடத்த உத்தரவு
அமேசான் நிறுவனமானது அதன் வர்த்தக இணைப்பில் இருக்கும் சில நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கறிஞர் கட்டணமாக மட்டும் சுமார் ரூ. 8,500 கோடி வரை செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையானது இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்தார், இதை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த அமேசான் நிறுவனம் உத்தரவிட்டிருக்கிறது.
சட்டக் கட்டணத்திற்கு செலவு
அதேபோல் இந்திய அரசைப் பொறுத்த வரையில் அரசாங்கத்தில் எந்த விதமான ஊழலையும் சகித்துக் கொள்ள முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருக்கின்றனர். அமேசான் நிறுவனம் ரூ. 8,500 கோடிக்கு மேல் சட்டக் கட்டணத்திற்கு செலவழித்து இருக்கிறது. அமேசான் நிறுவனங்களில் பொது கணக்குகளை அதிகாரிகளை மேற்கோள் காட்டியதில் தெரிவிக்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டது குறித்து விசாரணை
தி மார்னிங் கான்டெக்ஸ்ட் என்ற இணையதளத்தின் அறிக்கைபடி, அமேசான் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறித்து விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை
இந்த அமேசான் விவகாரம் ஆனது அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்து வகையில் இருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படியும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அகில இந்திய வர்த்தக சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
முறையற்ற செயல்கள் குறித்த குற்றச்சாட்டு
முறையற்ற செயல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையாக ஆராய்வதாகவும் அமேசான் தரப்பில் மேற்கொள் காட்டியிருக்கிறது. உழலை எந்த விதத்திலும் சகித்துக் கொள்ளாது எனவும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
போட்டிப்போட்டுக் கொண்டு தயாரிப்புகள்
ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தயாரிப்புகளை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருப்பது பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவை ஆகும். ஒவ்வொரு தளங்களும் தங்களது பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. கடை கடையாக ஏறி இறங்கி, பிடித்ததை தேடி அலைந்து வாங்கிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கே கொண்டுவந்து தருகிறார்கள். அதிலும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம்
அமேசான் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், தனது பொறுப்பில் இருந்து விலகிறார் எனவும் பெசோஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி இருக்கிறார். 1994 ஆம் ஆண்டு ஜெப் பெசோஸ் இதை புத்தகம் விற்பனை மையமாகவே தொடங்கினார். தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்தாலும் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
8000-க்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்கள்
சமீபத்தில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு 35 நகரங்களில் 8000-க்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டது. மேலும் இந்நிறுவனம் அதற்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு சலுகை தின அறிவிப்புகளை வாடிக்கையாளர்களை கவர்ந்து வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470