இலவச கொரோனா வைரஸ் சோதனைகளுக்கான ஆல்பாபெட் தளம்: உதுவுமா?
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் உலகில் 146 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

சுமார் 1.65 லட்சம்
உலகம் முழுவதும் இதுவரை, சுமார் 1.65 லட்சம் பேருக்கு இந்த தொற்றியுள்ளது, இவர்களில் சுமார் 6,500 பேர் பலியாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

ஆல்பாபெட் நிறுவனம்
இந்நிலையில் ஆல்பாபெட் நிறுவனம் மற்றும் கலிபோர்னியா கவர்னர் அலுவலகம் சேர்ந்து, மாநில மற்றும் உள்ளூர் பொது சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் COVID-19 சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் சில ஏற்பாடுகளைசெய்துள்ளது.

ப்ராஜெக்ட் பேஸ்லைன்
அதுஎன்னவென்றால் ப்ராஜெக்ட் பேஸ்லைன் எனப்படும் ஒரு பெரிய சுகாதார முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் அதன் புதிய தளத்தின் மூலம், கலிபோர்னியாவில் வசிக்கும் மக்கள் எந்த கட்டணமும் இன்றி COVID-19 க்கு பரிசோதனை செய்ய பதிவுபெறலாம். தற்போது, இது சாண்டா கிளாரா கவுண்டி மற்றும் சான் மேடியோ கவுண்டியில் வாழும் அனைவருக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா முழுவதும் மக்கள் சோதனைக்கு உதவும் வகையில் கூகிள் ஒரு தளத்தை உருவாக்கி வருவதாக அதிபர் டிரம்ப் கடந்த வாரம் தவறாக அறிவித்தார் . இருப்பினும். இது தளத்தை உருவாக்கிய கூகுள் அல்ல எனத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

நோய் தொடர்பான தகவல்களை இது கொண்டிருக்கும்
ப்ராஜெக்ட் பேஸ்லைன் கொரோனா வைரஸ் தொடர்பான அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒரு தளத்தையும் உருவாக்குகிறது, ஆனால் ஸ்கிரீனிங்கிற்கு உதவுவதற்கு பதிலாக, அறிகுறிகள் மற்றும் அபாயங்கள் உள்ளிட்ட நோய் தொடர்பான தகவல்களை இது கொண்டிருக்கும்.

மின்னஞ்சல் வழியாக முடிவுகளைப் பெறுவீர்கள்
ப்ராஜெக்ட் பேஸ்லைன் முதலில் உங்கள் புழழபடந கணக்கில் உள்நுழையும்படி கேட்கிறது அடிப்படை சுகாதார தொடர்பான கேள்விகளைக் கொண்ட ஆன்லைன் ஸ்கிரீனரை முடிக்க. நீங்கள் அதை முடித்ததும், மின்னஞ்சல் வழியாக முடிவுகளைப் பெறுவீர்கள் நீங்கள் ஒரு சோதனைக்கு தகுதியுடையவராக இருந்தால்,ஒதுக்கப்பட்ட நேரத்தில் இலவச சோதனைக்கு உங்கள் அருகிலுள்ள மையத்தைப் பார்வையிட நிறுவனம் கேட்கும்.

கொரோனா வைரஸின் அறிகுறிகள்
தளத்தின் கேள்விகள் மற்றும் எல்லா தகவல்களின் டேட்டாக்களும் நnஉசலிவநன வடிவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த தளத்தின் அனுபவத்தைப் பார்த்தால் அனைவருக்கும் ஒத்துப்போவதாகத் தெரியவில்லை. சிலர் கணக்கெடுப்பில் ஒரு கேள்வியைக் கண்டதாகக் கூறினர், மேலும் சிலர் கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாகக் கூறி கேள்விகளுக்கு பதிலளித்த பிறகும், அவர்கள் ஒரு சோதனைக்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்படுவதாகக் கூறினர் .

வெர்லியில் உள்ள திட்டக் குழு இந்த முரண்பாடுகளை விரைவில் அகற்றிவிடும் என்று நம்புகிறோம், இதனால் மக்கள் தளத்தில் பாதுகாப்பான மற்றும் நிலையான அனுபவத்தைப் பெற முடியும். ஒரளவு மக்கள் இதைப் பயன்படுத்த துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications