தேசிய பொறயாளர்கள் தினம், வரலாறும் பின்னனியும் ஒரு பார்வை
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தேசிய பொறியாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது. இந்தியாவின் சிறந்த பொறியாளராக விளங்கிய சர்.எம். விஸ்வேஸ்வராயாவின் நினைவாக இந்தியாவில் பொறியாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.

விஸ்வேஸ்வராயா கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் தான் உழைத்திருக்கிறார் என்ற தவரான செய்தி பரவியிருக்கின்றது, ஆனால் உண்மையில் அவர் நம் தேசத்திற்காக பல சிறப்பான திட்டங்களை வகுத்திருக்கிறார். இவரின் திட்டங்கள் உலகளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பூனே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பாம்பே அரசாங்கத்தின் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்தார். பொறியியல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர் 1890 ஆம் ஆண்டு தன் சுயசரிதையை எழுதினார். அரசாங்கமும் இவரை பாராட்டி பல அறிக்கைகளை வெளியிட்டது.
இவர் வடிவமைத்த தாணியங்கி ஸ்லூய்ஸ் கேட்களை பிபே ஏரி வழியும் போதும் பயன்படுத்தப்பட்டது. இதே திட்டம் திக்ரா மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை பாராட்ட அரசாங்கம் அறிவித்த பரிசு தொகையையும் அரசு நலத்திட்டத்திற்காக திருப்பி கொடுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications