ரிலையன்ஸ் ஜியோ கட்டண திட்டங்கள், நாளை வெளியாகுமா..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி நாளை (வியாழக்கிழமை) அந்நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தின் போது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் சேவையை வணிக ரீதியாக தொடங்கி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு விழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ 4ஜி சார்ந்த கட்டண திட்டங்கள் வெளியிடப்படலாம், மற்றும் ஜியோ கட்டண திட்டங்கள் ஆனது விரைவில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக நேர ரிலையன்ஸ் ஜியோவின் மூன்று மாத இலவச வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சேவையின் ஆக்கப்பூர்வம் இன்னும் அதிகரிக்கப்படும்.

உடன் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 3 கைபேசியில் பிராண்ட்களை நிறுவ முயற்சி செய்து கொண்டிருக்கிறது. சர்வதேச டேட்டா கார்பரேஷன் வழங்கிய சமீபத்திய அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது முறையே முதல் நான்கு இடங்களில் லெனோவா, இன்டெக்ஸ், மைக்ரோமேக்ஸ் மற்றும் சாம்சங் இருக்கிறது.

டிசம்பர் 2015-ல் அறிமுகமாகி, ரிலையன்ஸ் மொபைல் இணைப்புகள் மற்றும் தள்ளுபடி-விலை கைபேசிகள் அதன் 100,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் அதிகார்ப்பூர்வமான வெளியீடு மற்றும் அதன் கட்டணங்கள் சார்ந்த அறிவிப்பு செப்டம்பர் 1ம் தேதி (நாளை) ரிலையன்ஸ் ஆண்டு பொது கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது என்கிறது நம்பத்தகுந்த ஆதாரங்கள்.


Click it and Unblock the Notifications








